Advertisment

பள்ளிகள் திறப்பு; வெளியான முக்கிய அறிவிப்பு

opening of schools; Important announcement

Advertisment

தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டுக்காக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவிருந்தன. அதே சமயம், வெயிலின்தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்துவெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்வது கடும் சிரமம் என்று 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்அறிவித்திருந்தார்.

தொடர்ந்து வெயிலின் தாக்கம் குறையாததால் அமைச்சர் அன்பில் மகேஸ்முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட உத்தரவில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் 3 நாட்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று தொடங்கி வரும் 11 ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு என 3 தினங்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூடுதலாக பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற ஊர்களில் இருந்து சென்னை வருவதற்கு 650 பேருந்துகளும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி போன்ற இடங்களுக்கு 850 பேருந்துகள் என மொத்தம் 1500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

buses
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe