7 வாரங்களுக்கு பிறகு மதுரையில் இறைச்சி கடைகள் திறப்பு

Opening of meat shops in Madurai after 7 weeks

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் மே 31-ஆம் தேதி வரை நான்காம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. பொதுமுடக்கம் ஆரம்பிக்கப்பட்ட நாட்களிலிருந்தே அந்தந்த மாவட்ட நிர்வாகம் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் இறைச்சிக் கடைகள் திறக்கப்படுவது தொடர்பான விதிகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து வந்தது.

இந்நிலையில் 7 வாரங்களுக்குப் பிறகு நாளை மதுரையில் இறைச்சி கடைகளை கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளியை கடைபிடித்துதிறக்கலாம் என மதுரை மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் மதுரையில் ஏழு வாரங்களுக்கு பிறகு இன்று இறைச்சி கடைகள் திறக்கப்பட்டன.

corona virus madurai meat market
இதையும் படியுங்கள்
Subscribe