Skip to main content

ரேஷன் கடைகளில் தரமான பொருள்கள் மட்டுமே விநியோகிக்க வேண்டும்! பதிவாளர் அதிரடி உத்தரவு 

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

Only quality items should be distributed in ration shops! Registrar  order

 

ரேஷன் கடைகளில், தரமற்ற மற்றும் தரம் குறைந்த அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒருபோதும் விற்பனை செய்யக்கூடாது என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் அறிவுறுத்தி உள்ளார். 

 

தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தை கிடங்குகளிலேயே சரிபார்த்து தரமான அரிசியை மட்டுமே கடைகளுக்கு அனுப்ப வேண்டும். 

 

ரேஷன் கடைகளில் தரம் குறைந்த அரிசியை கண்டறியப்படும்போது, பணியாளர்கள் அவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப ஏதுவாக தனியாக வைக்க வேண்டும். வரும் காலங்களில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு தரமற்ற அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்யக்கூடாது. அவ்வாறு விற்பனை செய்வது தெரியவந்தால் அதற்கு கடை பணியாளர்களே முழு பொறுப்பு ஏற்க வேண்டும். 

 

சில மாவட்டங்களில், ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் துவரம் பருப்பு நுகர்வோர் கைகளில் கிடைக்கும்போது தரமற்று உள்ளதாக புகார் பெறப்பட்டு உள்ளன. அதனால், கொள்முதல் செய்யப்படும் இடத்தில் இருந்து நுகர்வோருக்கு கிடைப்பது வரை அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட வேண்டும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள், துவரம் பருப்பு உள்ளிட்ட சிறப்பு பொது விநியோகத்திட்ட பொருள்கள் தரமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

 

அதேபோல், விநியோகிக்கப்படும் பொருள்களில் எடை குறைவாக ஒருபோதும் விநியோகிக்கக் கூடாது. தரமான பொருள்களை மட்டுமே விநியோகிக்க வேண்டும் என்பதை அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரேசன் கடையில் கை விரல் ரேகை பதிவு விவகாரம்; தமிழக அரசு அதிரடி உத்தரவு

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Fingerprint registration issue at ration shop TN Govt Order

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013 இன் படி பொதுவிநியோகத் திட்ட தரவுகளில் ஏற்கனவே பதியப்பட்ட முன்னுரிமை மற்றும் அந்தியோதய அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் விவரங்களைச் சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் கை விரல் ரேகை பதிவு அடிப்படையிலான சரிபார்ப்பினை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. அதன்படி கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல்ரேகை சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 63% குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. மீதியுள்ள அட்டைதாரர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரேசன் கடைகளில் கை விரல் ரேகை சரிபார்ப்பை பிப்ரவரி மாத இறுதிக்குள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு சரிபார்க்கவில்லையெனில் குடும்ப அட்டையில் இருந்து பெயர்கள் நீக்கம் செய்யப்படும் என்று சில நாளிதழ்களில் செய்தி வெளியாகி இருந்தது. இதனையடுத்து ரேசன் கடைகளில் கை விரல் ரேகை சரிபார்க்காதவர்களின் குடும்ப அட்டைகள் ஏதும் ரத்து செய்யப்படமாட்டாது, கை விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்களும் நீக்கப்படாது, வெள்ளைத்தாளில் சுய விவரங்கள் ஏதும் தரவேண்டியதுமில்லை என்பதால் இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், “கை விரல் ரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி ரேசன் கடைக்கு வரவழைக்கக்கூடாது. கை விரல் ரேகை பதிவின் போது ஆவணங்கள் எதையும் கேட்க கூடாது. கை விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படும் என்ற தவறான தகவலை தரக்கூடாது. குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப, ரேசன் கடைக்கு சென்று கை விரல் ரேகையை பதிவு செய்துகொள்ளலாம். ரேசன் கடையில் விற்பனை முடிந்ததும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று கை விரல் ரேகை பதிவு செய்யும் பணியை முடிக்க அறிவுறுத்தப்படுகிறது. பயனாளிகளுக்கு இடையூறு இல்லாமல் குழப்பமின்றி கை விரல் ரேகை பதிவு பணியை முடிக்க வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது. 

Next Story

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Incentive announcement for fair price shop employees!

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி (15.09.2023) காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000 பெற்றுப் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்  திட்டத்தில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடை ஊழியர்களும் களப் பணியாற்றினர். இவர்களை ஊக்குவிக்கும் வகையில் தற்போது தமிழக அரசு நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரேசன் கார்டு ஒன்றுக்கு 50 காசுகள் வீதம் ஊக்கத்தொகை வழங்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.