Skip to main content

ஒரே ஆள் ஆனால் பலபெயர்... திருமண தகவல் இணையத்தில் பெண் மருத்துவர்களை குறிவைத்து மோசடி!

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

திருச்சியை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கணவனை இழந்து குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். மறுமணம் செய்வதற்காக திருமண தகவல் மைய இணையதளங்களிலும் விண்ணப்பித்திருந்தார் அந்தப் பெண் மருத்துவர். அப்போது ஒரு இணையதளத்தில் விது என்ற நபரின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. அதில் கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண் மருத்துவர்களுக்கு வாழ்வு கொடுக்க தயார் என அந்த இணையத்தில் விது பதிவிட்டுருக்கவே அந்தப் பெண் மருத்துவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டது. செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேச தொடங்கவே இருவருக்கும் காதல் மலர்ந்தது.

 

internet

 

திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பெண்ணுடன் விது நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஏமாற்றிக் கொண்டு இருந்த நிலையில் திருவண்ணாமலையில் உள்ள அந்த நபரின் வீட்டிற்கு அந்த பெண் மருத்துவர் சென்றபோது அவனைப் பற்றி தகவல்கள் தெரியவந்தது.

 

police

 

அந்த வீட்டில் அவனுக்கு வந்திருந்த கொரியர்  ஒன்றை பிரித்துப் பார்க்கவே அதில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவரின் கடிதம் இருந்தது. அது யாரென்று கேட்க சகோதரி என்று கூறி அவன் சமாளித்துள்ளான்.  இருப்பினும் அனுப்புனர் விவரத்திலிருந்து செல்போன் எண்ணுக்கு அந்த பெண் மருத்துவர் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது அப்போது எதிர்முனையில் பேசிய பெண் தன்னை மருத்துவர் என்று கூறிக்கொண்டு பேச தொடங்கியுள்ளார். அமெரிக்க மருத்துவரை மணந்துகொள்ள போவதாகவும் கூறவே திருச்சி பெண் மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார்.

 

 

police

 

அதன்பின்தான் விது பல்வேறு திருமண தகவல் மைய இணைய தளங்களில் வெவ்வேறு பெயர்களில் பதிவு செய்து வைத்துக் கொண்டு பல பெண் டாக்டர்களை ஏமாற்றி பழகி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தெரியாமல் 18 லட்சம் வரை அவனிடம் கொடுத்து ஏமாந்த அந்த பெண் மருத்துவர் லால்குடி மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

விசாரணையில் அவன் திருவண்ணாமலை மாவட்டம் பாரதி நகரைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டிடப் பொறியாளர் ஆக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவனை கைது செய்வதில் தாமதம் ஏற்படவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

 

police

 

police

 

சக்கரவர்த்தி கைது செய்யப்படாவிட்டால் திருச்சி எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றம் கண்டிக்கவே உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான் மிது.  விஜயகுமார், விது, சரவணன் ஆகிய பல பெயர்களில் அவன் திருமணத் தகவல் இணையதளங்களில் பதிவிட்டு ஏமாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

 

 

சக்கரவர்த்தி மீது பாலியல் வன்கொடுமை, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் என நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவனது கார் ஓட்டுனர் முருகன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நான் எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை எல்லோருமே என்னை தேடி வந்தார்கள் அவர்களே  ஏமார்ந்தார்கள் என அவன் தெரிவித்துள்ளான் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மணமகன் வராததால் அண்ணனையே திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A young girl who married her brother because the groom did not come

மாநில அரசு சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் வராததால், அரசு நிதியுதவியைப் பெறுவதற்காகத் தனது அண்ணனையே ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசின் சமூக நலத்துறை சார்பில் அவ்வப்போது ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருமணம் செய்யும் மணமக்களுக்கு ரூ. 51,000 மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி அன்று மகராஜ்கஞ்ச் பகுதிக்கு அருகே உள்ள லகிம்பூரில் உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மணமக்கள் கலந்து கொண்டனர். இதில், திருமணமான பெண்ணான பிரீத்தி யாதவ், அரசு நிதியுதவி பெறுவதற்காகப் பொய்யாக மீண்டும் தனது கணவர் ரமேஷ் யாதவ்வை திருமணம் செய்ய இருந்துள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் ரமேஷ் யாதவ் வரவில்லை.

இந்த நிலையில், அரசு நிதியுதவியைத் தவறவிடக் கூடாது என்று, பிரீத்தி யாதவின் அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்வது போல் நடிக்குமாறு அங்குள்ள தரகர்கள் பிரீத்தி யாதவ்விடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட பிரீத்தி யாதவ், தனது அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு நிதியுதவி பெறுவதற்காக பொய்யாகத் திருமணம் செய்துகொண்ட பிரீத்தி யாதவ், ரமேஷ் யாதவ், கிருஷ்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.