Skip to main content

அடிக்கிறது மட்டும் தானேத் தெரியும்... அணைக்கின்றது தெரியுமா..? மனிதத்தை மீட்டெடுக்கும் நெல்லை போலீசார்...!!!

Published on 29/03/2020 | Edited on 29/03/2020

வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டிற்குள் வந்து பட்டினியால் கிடந்தால் என்னாவது..? அதுவும் நெல்லுக்கு வேலிப்போட்ட நெல்லையில் பட்டியினியில் இருக்கலாமா..? என மாநகர சந்திப்பு விடுதி ஒன்றில் தங்கியிருந்த மத்தியபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 25 குடும்பங்களுக்கு தொடர்ந்து தங்கு தடையின்றி உணவினை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளது நெல்லை மாநகர காவல்துறை.

 

 Only hitting ... knows how to turn off ..? nellai cops to restore humanity ... !!!


கரோனா நோய் தொற்று விழிப்புணர்வு காரணமாக நாடெங்கிலும் ஏற்பட்ட ஊரடங்கின் விளைவாக அதிகம் பாதிக்கப்பட்டது என்னவோ அன்றாடங்காய்ச்சிகளே. மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து கம்பளி போர்வை, பெல்ட் ஆகியவனவற்றை விற்பனை செய்து வருவாய் ஈட்டும் 25 குடும்பங்கள் திருநெல்வேலி சந்திப்பில் கடந்த ஆறு மாதங்களாக வசித்து வருகின்றது. தினசரி வருவாய் இருந்தால் மட்டுமே பிழைப்பு நடத்த முடியும் என்ற கோட்பாட்டிற்குள் வரும் இவர்களையும் கரோனா விட்டு வைக்கவில்லை. சாலையில் திரியக்கூடாது, வியாபாரம் கூடாது என்று அறிவித்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 குடும்பங்களையும் அழைத்து சந்திப்பு பகுதியிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான விடுதியில் தங்க வைத்தது. கரோனா நோய் தொற்று வரக்கூடாது என ஓரிடத்தில் பாதுகாப்பாக வைத்தவர்கள் ஏனோ அவர்களின் உணவிற்கு வழி வகுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

 

 Only hitting ... knows how to turn off ..? nellai cops to restore humanity ... !!!


இந்நிலையில், விடுதியில் தங்கியிருக்கும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 25 குடும்பத்தாருக்கும் சரிவர சாப்பாடு கிடைக்கவில்லை" என உள்ளூர் சமூக ஆர்வலர்கள் மூலம் மாநகர காவல்துறைக்குத் தெரியவர, திருநெல்வேலி மாநகர சந்திப்பு காவல்துறை ஆய்வாளர் பெரியசாமியின் முயற்சியின் காரணமாக, உதவி ஆணையர் சதீஷ்குமார் மற்றும் இணை ஆணையர் சரவணன் ஒன்றிணைய, மாநகராட்சிக்கு சொந்தமான விடுதிக்கே வந்து அந்த குடும்பத்தினருக்குத் தேவையான அரிசி, கோதுமை மாவு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி அவர்களை மகிழ்வித்திருக்கின்றது நெல்லை மாநகர காவல்துறை.

 

 Only hitting ... knows how to turn off ..? nellai cops to restore humanity ... !!!

 

ஊரடங்கை மீறி சுற்றித்திரியும் வாலிபர்களை கண்டிக்கும் நோக்கில் போலீசார் லத்தியால் அடிக்கும் வீடியோ நாடெங்கும் வைரலாகி வரும் நிலையில், இச்சம்பவமும் வைரலாகியுள்ளது. " நாங்களும் உங்களைப் போல கடுமையானவர்கள் அல்ல, உங்களுக்கு சேவை புரியக்காகத் தான் நாங்கள் என மனிதத்தை வளர்க்கும் காவல்துறையினரை புரிந்து கொள்வார்களா ஊர் சுற்றும் இளைஞர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.