Skip to main content

இந்தியாவில் ஒரே கல்விமுறை சாத்தியமற்றது– கே.எஸ்.அழகிரி பேட்டி

Published on 13/09/2020 | Edited on 13/09/2020
The only education system in India is impossible - KS Alagiri interview

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, செப்டம்பர் 13ந்தேதி நிகழ்ச்சி ஒன்றுக்காக திருவண்ணாமலை நகருக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார், பீகாரில் ரகுவன்பிரசாத் சிங் என்ற புகழ்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்துள்ளார். நான் எம்.பியாக இருந்தபோது நானும் அவரும் நண்பரானோம். ஆரம்பத்தில் சோசலிஸ்ட் கட்சியில் இருந்தார், பின்னர் ஆர்.ஜே.டி இயக்கத்தில் இணைந்தவர் அவருக்கு இறங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீட் தேர்வு தமிழகத்தில் பாரதூர விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. நம் குழந்தைகள் அச்சத்தில் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள். இளைஞர்கள் பிரச்சனைகளை எதிர்க்கொள்ள வேண்டும், அச்சம் ஒருபோதும் தீர்வாகாது. அவ்வையார் அச்சத்தை தவிர் என்றார்.

தமிழகத்தை பொருத்தவரை நீட் தேர்வு நமக்கு பொருந்தாது. நமது குழந்தைகள், குறிப்பாக கிராமப்புற குழந்தைகள் படித்தது வேறு, நீட் தேர்வு என்பது வேறு. நம் குழந்தைகள் படித்தது நீட் தேர்வில் வராது. ஒரேநேரத்தில் சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வரமுடியாது. இந்தியாவில் ஒரே கல்விமுறை சாத்தியமற்றது. பல்வேறு சமூகம் மற்றும் பொருளாதாரம் உள்ள வாழும் மக்கள் உள்ள நாடு இது. மிகுந்த பொருட்செலவில் தனியார் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கும், எந்த வித வசதியும் இல்லாத ஓட்டு பள்ளியில் படிக்கும் பிள்ளைக்கும் ஒரே மாதிரியான தேர்வு என்பது தேவையற்றது.

நீட் தேர்வு தேவையில்லை என்கிற மாநிலங்கள் அதிலிருந்து விலகிக்கொள்ளலாம் என எங்கள் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி சொல்லியுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு தீர்க்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லியுள்ளது வரவேற்கதக்கது. தமிழகரசு, மத்தியரசிடம் பேசி நம் மாநில எண்ணத்துக்கு கொண்டு வரவேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்தியரசு திட்டமான பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது என எங்கள் கட்சி எம்.பி விஷ்ணுபிரசாத் ஆதாரபூர்வமாக குற்றம்சாட்டியுள்ளார். இதன் மீது மாவட்ட ஆட்சித்தலைவர், உள்ளாட்சி துறை அமைச்சர், முதலமைச்சர் என யாரும் பதில் சொல்லாதது ஆச்சர்யமாக இருக்கிறது.

புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பதற்கு காரணம் நாடு முழுவதும் கற்கும் முறை, கற்பிக்கும் முறை வெவ்வேறாக இருக்கும்போது எப்படி ஓரே தேர்வை ஏற்றுக்கொள்ள முடியும். அப்படி செய்தால் புதிய கல்விக்கொள்கை காலப்போக்கில் குலக்கல்வியாக மாறிவிடும். இந்த கல்வி முறை ஏராளமான தொழிலாளர்களை வேண்டுமானால் உருவாக்கலாம், பொறியாளர்களை உருவாக்க முடியாது, ஏராளமான கூலிகளை வேண்டுமானால் உருவாக்கலாம், ஏராளமான மருத்துவர்களை உருவாக்க முடியாது.

சமூக பிரச்சனைகளை நான்கு அதிகாரிகள், நான்கு அரசியல்வாதிகள் எடுக்ககூடாது. கல்வியாளர்கள், ஊடகம், பொதுமக்கள் விவாதத்துக்கு பின்பு எடுக்க வேண்டும், அதனால் தான் நாம் எடுக்கவேண்டும்.

விவசாயிகளுக்காக கொண்டு வரப்பட்ட கிசான் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் விவகார விசாரணை சிபிசிஐடிக்கு பதில், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் இந்த விசாரணை நடைபெற வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மாஜி காங். தலைவர் கொலை வழக்கு; ஜூன் 5க்கு தள்ளி வைப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ex tamilnadu Congress leader case was adjourned to June 5
தாளமுத்து நடராஜன்

தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

ex tamilnadu Congress leader case was adjourned to June 5
ஜெயில்தார் சிங்

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார்.