Skip to main content

கஜாபுயலால் நாகை மாவட்டத்தில் 181 கிராமம் மட்டுமே பாதிப்பு; மீண்டும் பதட்டத்தை பற்றவைக்கும் அமைச்சர் ஒ.எஸ்.மணியன்

Published on 19/01/2019 | Edited on 19/01/2019

நாகையில் கஜா புயல் பாதித்த 181 கிராமங்களுக்கு மட்டுமே அரசின் நிவாரண சலுகைகள் பொருந்தும் என அமைச்சர் ஒ.எஸ்.மணியன் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் எரிச்சலை மூட்டியுள்ளது.

 

நாகை மாவட்டம் கீழ்வேளூர் கிராமத்தில் பல ஆண்டுகாலமாக பழுதடைந்திருந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதிதாக கட்டுவதற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கட்டுமான பணியை பூமி பூஜை செய்து தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார். அப்போது கீழையூர் கிராமத்தில் கஜா புயலால் உயிரிழந்த  3 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் காசோலையை அமைச்சர் மணியன் வழங்கினார். 

 

Only 181 villages in Nagapattinam district have been affected by Kajapalai; Minister OMMayan has been refusing to get tense again

 

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஓஎஸ்.மணியன்," கஜா புயல் பாதித்த பகுதிகளில் 95% நிவாரண பணிகள் முடிந்துவிட்டது,  கஜா புயல் பாதித்த பகுதிகளில் வீடுகளை இழந்து நிற்கும் அனைவருக்கம் நிரந்தர வீடுகள் கட்டித்தரப்படும். பட்டா வைத்திருப்பவர்கள், கோவில் நிலத்தில் குடியிருந்தவர்கள் அனைவருக்கும் நிரந்தர வீடுகள் கட்டாயம் கட்டித்தரப்படும். குடிசை இல்லா டெல்டாவை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும்  தமிழக அரசால் எடுக்கப்பட்டு வருகிறது."என்றார்.

 

நிவாரணம் கேட்டு பொதுமக்கள் இன்னும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறார்களே என கேட்டபோது, "கஜா புயலால் நாகை மாவட்டத்தில் 181 கிராமங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் பொருந்தும். என்றார் திட்டவட்டமாக.

 

கஜாபுயல் நிவாரணம் கிடைக்காமல் பல கிராமத்து மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர் ஒ.எஸ்.மணியனின் பேச்சு பலதரப்பட்ட மக்களையும் எரிச்சல் அடையசெய்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி; கிராம மக்கள் எதிர்ப்பு!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Construction of Vallalar International Centre; Villagers issue

கடலூர் மாவட்டம் வடலூரில் ‘வள்ளலார் சர்வதேச மையம்’ அமைக்கப்படும் என்ற வாக்குறுதியைக் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.

இத்தகைய சூழலில்தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்வதேச மைய கட்டடம் கட்ட வடலூர் பெருவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் இதற்கான பணிகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பார்வதிபுரம் கிராமத்தினர் எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி தங்களது கண்டனத்தை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் புறக்கணிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பார்வதிபுர கிராம மக்களால் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்தக் கட்டடமும் கட்டக் கூடாது எனப் பார்வதிபுர கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.