வாங்கிய கடனை எப்படி செலுத்துவது என்று குழம்பிப் போன அருள்வேல் தனது மனைவி திவ்யா மற்றும் மூன்று வயது மகனுடன் சொந்த ஊரான பண்ருட்டிக்கு சில தினங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அருள்வேலின் மனைவி குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட அருள்வேல் தனது தந்தை சிற்றரசு மற்றும் ராஜலட்சுமி ஆகியோருடன் பண்ருட்டியில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பைனான்சியர் கொடுத்த பணத்தை கேட்டு ஆபாசமாக மிரட்டியதாக கூறப்படுகிறது.
கடன் தொகை 50 லட்சத்தை தாண்டியதால் இந்த தொகையை எப்படி கட்டுவது என்று அருள்வேலின் தாய் ராஜலட்சுமியும் தந்தை சிற்றரசும் தவித்து வந்தனர். ராஜலட்சுமி ஓய்வு பெற்ற செவிலியர் என்றும் கௌரவமான குடும்பத்தை என்றும் கூறப்படுகிறது. கந்து வட்டி கும்பலின் ஆபாச மிரட்டலால் மனம் நொந்து போன ராஜலட்சுமியும் அருள்வேலும் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தந்தை சிற்றரசு வெளியே சென்றிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கந்து வட்டி கும்பலின் மிரட்டல் குறித்து ஏற்கனவே மூன்று மாதங்களுக்கு முன்பு பன்ருட்டி காவல் நிலையத்தில் சிற்றரசு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் திருப்பி அனுப்பியுள்ளனர். அரசியல் செல்வாக்கு இருப்பதால் அந்த பைனான்சியர் மீண்டும் வீடு புகுந்து கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் அருள்வேலும் அவரது தாய் ராஜலட்சுமியும் உயிரை மாய்த்துக் கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
வீட்டில் உள்ள சாமி படத்திற்கு பின்னால் இருந்து ராஜலட்சுமி கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் கடிதத்தில் மகன் ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்தது குறித்தும் கந்துவட்டி பைனான்ஸ் மிரட்டல் குறித்தும் ராஜலட்சுமி குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.