Online Prohibition Act! E-Gaming Federation oppose

தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் சட்டத்திற்கு எதிராக சட்ட ஆலோசனையின் படி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என இ- கேமிங் பெடரேஷன் அறிவித்துள்ளது.

Advertisment

இ- கேமிங் பெடரேஷன் செயலாளர் மலாய் குமார் சுக்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி மற்றும் போக்கரை தடை செய்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய சட்டத்தில் ரம்மி மற்றும் போக்கர் ஆகியவிளையாட்டுக்களை வாய்ப்பு இல்லை என தவறாக வகைப்படுத்தி உள்ளது.

Advertisment

இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் பல உயர் நீதிமன்றங்களால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளில், போக்கர் மற்றும் ரம்மி போன்ற விளையாட்டுகள் திறமையான விளையாட்டுகள் மற்றும் வாய்ப்பு விளையாட்டுகள் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 2021ம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பில், ரம்பி மற்றும் போக்கர் திறமை விளையாட்டுகள் என கூறியுள்ளது. மேலும் வாய்ப்பு விளையாட்டுகளை வேறுபடுத்துவதற்கான முன்னுரிமை சோதனை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது. திறன் விளையாட்டுகள் பிரிவு 19(1)(g) இன் கீழ் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் சூதாட்ட நடவடிக்கைகளிலிருந்து வேறுபட்டவை. இந்த புதிய சட்டத்தின் கீழ் ரம்மி மற்றும் போக்கர் விளையாட்டுகள் வாய்ப்பு அல்லது சூதாட்ட விளையாட்டுகள் என தடை செய்யப்பட்டுள்ளது என்பது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணானது.

Advertisment

ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் அரசாங்கத்தால் ஒரு முற்போக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கான அதன் தயார்நிலையில் எப்போதும் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது. நாங்கள் சட்டத்தை ஆராய்ந்து வருகிறோம். சட்ட ஆலோசனையின் அடிப்படையில் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம்" என அதில் கூறியுள்ளார்.