Skip to main content

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தொடரும் ஓ.என்.ஜி.சி. அட்டூழியம்..! 

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

ONGC Pipe line problem in thiruvarur district cultivation land spoiled

 

டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டும் ஒ.என்.ஜி.சி.யின் அட்டூழியம் குறைந்திடவில்லை. குழாய் வெடித்து உடைப்பு ஏற்படுவதும், சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாயமும், விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகிவருகிறது. 

 

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே மேலப்பணையூர் கிராமத்தில் சிவக்குமார் என்பவரது விளைநிலத்தின் வழியாகச் செல்லும் ஓ.என்.ஜி.சி. குழாயில் நேற்று (30.06.2021) உடைப்பு ஏற்பட்டு, அதிலிருந்து வெளியேறிய ஆயில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்த அந்த  நிலம் முழுவதுமாக பரவி பயிர் சேதமடைந்தது. இதையறிந்த விவசாயிகள் செய்வதறியாது போராட்டத்தில் ஈடுபட முடிவுசெய்தனர். இதற்கிடையில் வேளாண்துறை அதிகாரிகளும், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். 

 

இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், "பாதிக்கப்பட்ட மண் முழுவதும் மாற்றித் தர ஒ.என்.ஜி.சி. நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது. அதோடு உரிய இழப்பீடு அவருக்கு பெற்றுத் தரப்படும்" என தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் விவசாயிகளோ, "பாதிக்கப்பட்ட விளைநிலத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்க வேண்டும்" என கோரிக்கை வைத்தனர். ஆனால், ஓ.என்.ஜி.சி. நிர்வாகமோ, “1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மண் முழுவதும் அகற்றிவிட்டு அந்த இடத்தில் வேறு மண் சேர்க்கப்படும். நடப்பு பருவத்திலேயே அவர் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக பணிகள் செய்து தரப்படும். பாதிப்பு வராது" என்று உறுதியளித்துள்ளனர்.

 

இதுகுறித்து விவசாயி சிவக்குமார் கூறுகையில், “அந்தத் தொகையை 15 தினங்களுக்குள் எனக்கு வழங்கப்படும் என ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மண்ணை உடனடியாக மாற்றித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஓ.என்.ஜி.சி. தரப்பில் உத்தரவாதமாக தெரிவித்துள்ளனர்" என்றார்.
 

மேலும் இதுதொடர்பாக பேசிய ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பாளர்களும், விவசாயிகளும், "எங்களைப் பொறுத்தவரை சோறுபோடுகிற மண்ணும், பெண்ணும், உசுரும் ஒன்னுதான். அதுக்கு தொடர்ந்து கடந்த ஆட்சியில் கலங்கம் உண்டாக்கினர். கடைசி நேரத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தனர். ஆனாலும் ஒ.என்.ஜி.சி. எனும் பொதுத்துறை நிர்வாகத்தின் பெயரில் பல தனியார் நிறுவனங்கள் கொள்ளைப்புறமாக நுழைய ஆயத்தமாவதும், அதை நாங்கள் போராடி தடுத்து நிறுத்துவதும் வாடிக்கையாகவே இருக்கிறது. 

 

இது ஒறுபுறம் இருக்க, இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விளைநிலத்தின் குறுக்கே புதைக்கப்பட்ட குழாய்கள் அதற்கான ஆயுட்காலம் முடிந்து ஆங்காங்கே வெடித்து ஆயில் வெளியேறி நிலங்களைப் பாழாக்கிவருகிறது. ஒ.என்.ஜி.சி.யின் அட்டூழியம் தொடர்கதையாகிவிட்டது. இதற்கு தமிழக முதல்வர் ஒரு முடிவுகட்ட வேண்டும்" என்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.