Skip to main content

ஓராண்டாக உடைந்துகிடக்கும் பாலத்திற்கு மலர்வளையம் வைத்து போராட்டம்!!

Published on 09/11/2018 | Edited on 09/11/2018

ஓராண்டுக்கு மேலாக விரிசல் ஏற்பட்டு பயன்பாடற்ற நிலையில் இருக்கும் நாகை புத்தூர் ரயில்வே மேம்பாலத்திற்கு மலர்வளையம் வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர் முக்குலத்து புலிகள் அமைப்பினரும் பொதுமக்களும்  

 

       

நாகப்பட்டினம், தூத்துக்குடி கிழக்குக்கடற்கரை சாலையில், நாகையை அடுத்துள்ள புத்தூரில் அமைந்துள்ளது நாகை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டிக்கான ரயில்வே மேம்பாலம். 2011 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு மிகவும் தாமதமாக   2013 ஆம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பிற்கும், மக்கள் பயன்பாட்டுக்கும்  கொண்டுவரப்பட்டது.

 

protest

 

நாகை, திருவாரூர், தஞ்சை மார்க்கத்தில் ரயில்கள்  செல்லும் போது, நாகை வேளாங்கண்ணி சாலை மார்க்கத்தில் பயணிக்கும் புத்தூர் ரயில்வே கேட்  போடப்படுவதால், வாகனங்கள் பல மணி நேரங்கள் காத்திருந்து கூட்டநெரிசலுக்கு ஆளகியது, அதோடு திருவாரூர், நாகை சாலையும் ஸ்தம்பித்து போகும் நிலையே இருந்தது. அதற்கு இந்தப் பாலம் மிகப்பெரும் ஆறுதலாக அமைந்தது. அதோடு இந்தப்பாலத்தின் மூலம் கிழக்குக்கடற்கரை சாலைவழியே தொலைதூரபயணம் மேற்கொள்ளும் இலகுரக மற்றும் கனரக வாகனங்களுக்கான முக்கியபோக்குவரத்துத் தடமாகவும் விளங்கியது.

 

protest

 

இந்தநிலையில்  மேம்பாலத்தின் மேல்தள இணைப்புகளுக்கு இடையே பெரும் விரிசல் ஏற்பட்டு அச்சத்தை ஏற்படுத்தியது.மேலும் வாகனங்கள் தொடர்ந்து செல்வதால் இடைவெளி அதிகரிக்கிறது என்றும், வாகனங்கள்  செல்லும் போது, அதிக அதிர்வு ஏற்படுவதாகவும் கடந்த 2016-ஆம் ஆண்டில் பொதுமக்களிடமும். போக்குவரத்து ஓட்டுனர்கள் மத்தியிலும் சர்ச்சைகள் ஏற்பட்டன. ஆனால், அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ விழிப்புணர்வோ, பாதுகாப்போ ஏற்படுத்தாமல்  விட்டுவிட்டனர்.  அதன் விளைவு 2017-ஆம் ஆண்டு மார்ச் 25 தேதி வாக்கில் புத்தூர் ரயில்வேமேம்பாலத்தின் வடப்புற பகுதி இணைப்பில் இடைவெளி அதிகமாகி சுமார் அரை அடி அகலத்துக்கும் அதிகமான அளவில் விரிசல் ஏற்பட்டது.  இதனால், மார்ச் 25-ஆம் தேதி இரவு முதல் இந்தப் பாலம் வழியேயான வாகனப் போக்குவரத்துத் தடைசெய்யப்பட்டது.

 

 

பிறகு  பாலத்தை சீரமைக்கும் பணிக்கான முயற்சிகளை நெடுஞ்சாலைத் துறையினர் 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்  மேற்கொண்டனர். இடைவெளி மிக அதிகமாகியிருந்த ஒரு எக்ஸ்பேன்சன் இணைப்பில், இடைவெளியைக் குறைக்கவும், இடைவெளி அதிகமாகாமல் தடுக்கவும் இரும்புப் பட்டைகளை பொருத்தினர் ஆனால், அந்த முயற்சி உரிய பயனை தரவில்லை. அதன் பிறகு பாலத்தின் இரண்டு புறமும் அடைத்து பணிகளை கிடப்பில் போட்டுவிட்டனர்.  

 

 

இந்த நிலமையில் பாலத்தை உடனே சரி செய்யவேண்டும் என முக்குலத்துப்புலிகள் அமைப்பின் தலைவர் ஆறு சரவணன் தலைமையில் பாலத்திற்கு மலர்வளையம் வைத்து முழக்கங்களை எழுப்பினர்.

 

protest

 

இதுகுறித்து ஆறு சரவணன் கூறுகையில், ‘’புத்தூர் மேம்பாலம் பிரதானமானது கிழக்கு கடற்கரையில் செல்லும் பயணிகளுக்கு மட்டுமின்றி, வேதாரண்யம், கோடியக்கரை, வேளாங்கண்ணி உள்ளிட்ட இடங்களுக்கு வரும் சுற்றுளா பயணிகளின் பிரதான பாலமாகவும் இருக்கிறது. ரயில் வரும் போது புத்தூர் கடைவீதியே டிராபிக்கால் நிலைகுளைந்துவிடுகிறது, இந்த பாலம் மாவட்டத்தின் தலைநகரில் இருந்தும் அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை, அதோடு மாவட்டத்தின் அமைச்சரான ஒ.எஸ்.மணியனின் சொந்த ஊருக்கு செல்லும் பாலமும் இதுவாக இருந்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. அதோடு பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த பாலமானது 10 ஆண்டுகளுக்கு கூட பயன்படவில்லை என்பதுதான் வேதனையாக இருக்கிறது.’’ என்கிறார். 

 

 

நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரோ, ‘’ புத்தூர் பாலம் சீரமைப்புப் பணிகளுக்கு ரூ. 4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 2 கோடி மதிப்பில் பாலம் சீரமைப்புப் பணிகளும், ரூ. 2 கோடி மதிப்பில் அணுகு சாலை சீரமைப்புப் பணிகளுக்காகவும் திட்டமிடப்பட்டுப்பணிகள் தொடங்கப்பட்ட உள்ளன. பணிகளை நிறைவேற்ற 6 மாத காலம் அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. ’’ என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது