Skip to main content

"கருவை கலைச்சிட்டு வா கல்யாணம் பண்ணி வைக்கிறேன்!" - இளம்பெண்ணை ஏமாற்றிய குடும்பம்!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

The one who got married and went home, came only twice a week ... cheating came to light

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையம், வடக்கு வீதியைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் முத்துமாரி. அவர் இன்று 16ந் தேதி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். பிறகு அவர் கூறும்போது, “சென்ற 2018 ஆம் ஆண்டு சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் தீனதயாளன் என்பவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. இந்தப் பழக்கம் எங்களுக்குள் நாளடைவில் காதலாக மாறியது.

 

தீனதயாளன் எனக்கு திருப்பூரில் வேலை வாங்கித்தருவதாகக் கூறினார். நானும் திருப்பூருக்குச் சென்றேன். பெருமாநல்லூரில் உள்ள நேதாஜி அப்பேரல் பார்க் என்ற இடத்தில் உள்ள ஒரு கம்பெனியில் அவர் என்னை வேலைக்குச் சேர்த்துவிட்டார். நான் அந்த கம்பெனியின் மகளிர் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தேன். தீனதயாளனும் நானும் விடுமுறை நாட்களில் நேரில் சந்திப்பதும் பிறகு தொலைப்பேசியில் பேசுவதும் வாடிக்கையாக இருந்தது. ஏன் மகளிர் விடுதியில் தங்க வேண்டும் வெளியில் தனியாக வீடு பார்த்துள்ளேன், அதில் தங்கலாம் எனக் கூறினார்.

 

இதனால் நான் விடுதியை காலி செய்து அவருடன் ஒரே வீட்டில் தங்கி திருமணம் ஆகாமலேயே கணவன் மனைவியாய் வாழ்ந்து வந்தோம். உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி என்னோடு உறவு வைத்துக் கொண்டார். ஆறு மாதம் பொறுத்திரு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்வதாக உறுதி கொடுத்தார். நான் முழுமையாக அவரை நம்பினேன். பிறகு அவர் அவரது வீட்டுக்குப் போய் விட்டார். வாரத்துக்கு இரண்டு முறை மட்டுமே வந்து என்னோடு இருந்து செல்வார். இந்த நிலையில், நான் கர்ப்பம் ஆனேன். தீனதயாளனிடம் இதுபற்றி கூறி என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளுங்கள் என வேண்டினேன்.

 

அவர் என்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறினார். அதிர்ச்சியடைந்த நான் கோபி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றேன். அப்போது தீனதயாளனின் பெற்றோர் வந்து என்னைத் தடுத்து நிறுத்தி நாங்கள் திருமணம் செய்து வைக்கிறோம் என உறுதி கூறினார்கள். அதே போல் உங்கள் திருமணம் நடைபெற வேண்டுமென்றால் நீ கர்ப்பத்தைக் கலைத்து விட்டு வர வேண்டும் என்றனர். பிறகு தீனதயாளனின் அம்மாவே என்னை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எனது வயிற்றில் இருந்த கருவைக் கலைக்க வைத்தார். பிறகு இப்போது நடந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்காக எனது ஊருக்கு என்னை அனுப்பி வைத்தார்.

 

தேர்தல் முடிந்து ஓட்டு போட்டப் பிறகு மீண்டும் அவங்க ஊருக்கு நான் சென்றபோது நீ இனிமேல் இங்கு வரக்கூடாது என தீனதயாளன், அவரது பெற்றோர்கள் என்னை மிரட்டினார்கள். என் மகன் உன்னுடன் சேர்ந்து வாழ மாட்டான் எனக் கூறி என்னை துரத்தி விட்டனர். இதனால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகி உள்ளேன். என்னைத் திருமணம் செய்வதாகக் கூறி கட்டாயப்படுத்தி என்னோடு உறவுவைத்து அதன் மூலம் உருவான கருவைக் கலைக்க வைத்த எனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் ஏமாற்றப்பட்டுள்ளேன், எனது நிலை போல் வேறு யாருக்கும் வரக்கூடாது என்றால் ஃபேஸ்புக்கை நம்பாதீங்க” என்றார் பரிதாபமாக.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.