Skip to main content

"கருவை கலைச்சிட்டு வா கல்யாணம் பண்ணி வைக்கிறேன்!" - இளம்பெண்ணை ஏமாற்றிய குடும்பம்!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

The one who got married and went home, came only twice a week ... cheating came to light

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையம், வடக்கு வீதியைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் முத்துமாரி. அவர் இன்று 16ந் தேதி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். பிறகு அவர் கூறும்போது, “சென்ற 2018 ஆம் ஆண்டு சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் தீனதயாளன் என்பவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. இந்தப் பழக்கம் எங்களுக்குள் நாளடைவில் காதலாக மாறியது.

 

தீனதயாளன் எனக்கு திருப்பூரில் வேலை வாங்கித்தருவதாகக் கூறினார். நானும் திருப்பூருக்குச் சென்றேன். பெருமாநல்லூரில் உள்ள நேதாஜி அப்பேரல் பார்க் என்ற இடத்தில் உள்ள ஒரு கம்பெனியில் அவர் என்னை வேலைக்குச் சேர்த்துவிட்டார். நான் அந்த கம்பெனியின் மகளிர் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தேன். தீனதயாளனும் நானும் விடுமுறை நாட்களில் நேரில் சந்திப்பதும் பிறகு தொலைப்பேசியில் பேசுவதும் வாடிக்கையாக இருந்தது. ஏன் மகளிர் விடுதியில் தங்க வேண்டும் வெளியில் தனியாக வீடு பார்த்துள்ளேன், அதில் தங்கலாம் எனக் கூறினார்.

 

இதனால் நான் விடுதியை காலி செய்து அவருடன் ஒரே வீட்டில் தங்கி திருமணம் ஆகாமலேயே கணவன் மனைவியாய் வாழ்ந்து வந்தோம். உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி என்னோடு உறவு வைத்துக் கொண்டார். ஆறு மாதம் பொறுத்திரு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்வதாக உறுதி கொடுத்தார். நான் முழுமையாக அவரை நம்பினேன். பிறகு அவர் அவரது வீட்டுக்குப் போய் விட்டார். வாரத்துக்கு இரண்டு முறை மட்டுமே வந்து என்னோடு இருந்து செல்வார். இந்த நிலையில், நான் கர்ப்பம் ஆனேன். தீனதயாளனிடம் இதுபற்றி கூறி என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளுங்கள் என வேண்டினேன்.

 

அவர் என்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறினார். அதிர்ச்சியடைந்த நான் கோபி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றேன். அப்போது தீனதயாளனின் பெற்றோர் வந்து என்னைத் தடுத்து நிறுத்தி நாங்கள் திருமணம் செய்து வைக்கிறோம் என உறுதி கூறினார்கள். அதே போல் உங்கள் திருமணம் நடைபெற வேண்டுமென்றால் நீ கர்ப்பத்தைக் கலைத்து விட்டு வர வேண்டும் என்றனர். பிறகு தீனதயாளனின் அம்மாவே என்னை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எனது வயிற்றில் இருந்த கருவைக் கலைக்க வைத்தார். பிறகு இப்போது நடந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்காக எனது ஊருக்கு என்னை அனுப்பி வைத்தார்.

 

தேர்தல் முடிந்து ஓட்டு போட்டப் பிறகு மீண்டும் அவங்க ஊருக்கு நான் சென்றபோது நீ இனிமேல் இங்கு வரக்கூடாது என தீனதயாளன், அவரது பெற்றோர்கள் என்னை மிரட்டினார்கள். என் மகன் உன்னுடன் சேர்ந்து வாழ மாட்டான் எனக் கூறி என்னை துரத்தி விட்டனர். இதனால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகி உள்ளேன். என்னைத் திருமணம் செய்வதாகக் கூறி கட்டாயப்படுத்தி என்னோடு உறவுவைத்து அதன் மூலம் உருவான கருவைக் கலைக்க வைத்த எனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் ஏமாற்றப்பட்டுள்ளேன், எனது நிலை போல் வேறு யாருக்கும் வரக்கூடாது என்றால் ஃபேஸ்புக்கை நம்பாதீங்க” என்றார் பரிதாபமாக.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

கணேசமூர்த்தி உடலுக்கு துரை வைகோ அஞ்சலி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Durai Vaiko Tribute to GaneshaMurthy 

ம.தி.மு.க.வின் பொருளாளராக இருந்த கணேசமூர்த்தி ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யாக பணியாற்றி வந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் ம.தி.மு.க.வுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி, சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று (28.03.2024) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்ததுடன் நேரில் சென்று உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினர்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறைக்கு இன்று மாலை நேரில் சென்று மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடலுக்கு மாலை அணிவித்து ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார். அதே சமயம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் அஞ்சலி செலுத்தினார். அனைத்துக் கட்சி முன்னணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் துரை வைகோ இரங்கல் உரை ஆற்றினார்.

Durai Vaiko Tribute to GaneshaMurthy 

இந்த இரங்கல் கூட்டத்தில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எனப் பலரும் கலந்து கொண்டனர்.