சென்னை புளியந்தோப்பில் கரோனா பாதிப்பால் உணவின்றியும், வருமானம் இல்லாமலும் கஷ்டப்படும் முதியோருக்கு உதவிடும் வகையில் இந்து மக்கள் முன்னணி அமைப்பினர் ஒரு ரூபாய் உணவகம் திறந்துள்ளனர்.
15.06.2020 அன்று மதியம் துவங்கப்பட்ட இந்த உணவகத்தில் தினந்தோறும் காலை, மாலை என இரு வேளையும் ஒரு ரூபாய்க்கு, முதியோர்களுக்கு மட்டும் உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கின்றனர் இந்து மக்கள் முன்னணி அமைப்பினர்.