Skip to main content

ஒரு பானை தண்ணீர் 15 நாட்களுக்கு போதும்... மரங்களுக்காக 200 மண் பானைகளை வழங்கிய மாணவர்கள்!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் இளைஞர்களின் சொந்த முயற்சியில் அந்த கிராமத்தில் உள்ள குளங்கள், ஏரிகள், வரத்துவாய்க்கால்கள், அணைக்கட்டுகளை சீரமைத்து வருகின்றனர். இளைஞர்களின் இந்தபணியை பலதரப்பினரும் பாராட்டினாலும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் இளைஞர்களின் இந்த முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முதியவர்களும் பள்ளி மாணவ, மாணவிகளும் தங்கள் சேமிப்புகளை நீர்நிலை சீரமைப்பிற்காக வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் சீரமைக்கப்படும் நீர்நிலைகளில், கரைகளில் சுமார் 3 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் திட்டத்தில் முதல்கட்டமாக சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு கால்நடைகளிடம் இருந்து காப்பாற்ற கூண்டுகள் அமைத்துள்ளனர். மேலும் தினசரி மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்ற பெண்களை நியமித்ததுடன் தண்ணீர் குடங்களை எளிதாக எடுத்துச் செல்ல அதற்காண வண்டிகளையும் இளைஞர்கள் வாங்கி வழங்கி உள்ளனர்.

 One pot of water is enough for 15 days… students who have supplied 200 earthen pots for trees!


இந்நிலையில் செவ்வாய் கிழமை அலஞ்சிரங்காடு கிராமத்தில் உள்ள குருகுலம் அறக்கட்டளை சார்பில் இயங்கி வரும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகி சிவநேசன் ஆகியோர் ஒரு வேனில் சுமார் 200 மண் பானைகளை கொண்டு வந்து கொத்தமங்கலம் இளைஞர் மன்றத்தினரிடம் வழங்கினார்கள். மேலும் மரக்கன்றுகளுக்கு தினசரி தண்ணீர் ஊற்றி தண்ணீரை வீணாக்காமல் கன்றுகளுக்கு அருகில் பானையை புதைத்து சிறிய ஓட்டை போட்டு வைத்தார் தண்ணீர் மரக்கன்றின் வேர் பகுதியில் பல நாட்கள் கசிந்து கொண்டிருக்கும். அதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தலாம் என்று கூறியதுடன், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் மாணவிகளே செய்து காட்டினார்கள். 

 

 One pot of water is enough for 15 days… students who have supplied 200 earthen pots for trees!


இது குறித்து குருகுலம் சிவநேசன் கூறும் போது.. தற்போது நிலடித்த நீர் பற்றாக்குறையால் மண்ணில் ஈரப்பதம் இல்லை. அதனால் மரக்கன்றுகளுக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் உடனே காய்ந்துவிடும். அதனால் கன்றுகளுக்கு போதிய தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால் நடப்படும் மரக்கன்றுகள் அனைத்தும் வளர்வதில்லை. ஆனால் மரக்கன்றுகளோடு ஊசி முனை அளவு ஓட்டை போடப்பட்ட மண்பானையை புதைத்து தண்ணீர் ஊற்றி வைத்தால் அந்த தண்ணீர் ஒரு வாரத்திற்கு மேல் மரக்கன்றுகளின் வேர் பகுதியில் கசிந்து 15 நாட்களுக்கு மேல் ஈரம் காக்கப்படும். அதனால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தலாம். கொத்தமங்கலத்தில் இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதை அறிந்து எங்கள் பள்ளி மாணவர்கள் பானை வழங்க முன்வந்தனர். அவர்களே பானைகளையும் கொண்டும் வந்தனர். அந்த பானைகளை வழங்கியதுடன் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் செய்து காட்டியுள்ளோம். இதேபோல மரக்கன்றுகள் நடப்படும் அனைத்து இடங்களிலும் பானைகளை பயன்படுத்தி கசிவு நீர் பாசனம் செய்தால் அதிகளவில் தண்ணீர் வீணாவதை தடுக்கலாம் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

கடைசிவரை பேச்சுவார்த்தை தோல்வி; இறுதிவரை புறக்கணித்த இறையூர் மக்கள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் அதிகமான கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு பதாகைகளை காண முடிந்தது. அதேபோலதான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி, முத்துக்காடு ஊராட்சி, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு கலந்த உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக 502 வாக்காளர்களைக் கொண்ட இறையூர் கிராம மக்கள் பதாகை வைத்தனர்.

அதேபோல இதேகோரிக்கையை வலியுறுத்தி 59 வாக்காளர்களை கொண்ட வேங்கை வயல் கிராம மக்களும் தேர்தல் புறக்கணிப்பு பதாகை வைத்தனர். இந்த பகுதிக்கு எந்த ஒரு வேட்பாளரும் வாக்கு கேட்டு வரவில்லை. திருச்சி நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மட்டும் வந்து சென்ற நிலையில் அவர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இறையூர் மற்றும் வேங்கை வயல் கிராமங்களில் உள்ள 561 வாக்காளர்கள் வாக்களிக்க வேங்கைவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குப்பதிவு மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், காலை முதல் வாக்குப் பதிவிற்கு அதிகாரிகள் காத்திருந்த நிலையில் அரசு ஊழியர் வாக்கு ஒன்று பதிவானது, தொடர்ந்து இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க காவேரி நகர் உள்ளிட்ட வெளியூரில் இருந்த சிலர் வந்து வாக்களித்தனர். மதியம் வரை 6 வாக்குகள்  மட்டுமே பதிவாகி இருந்தது.

nn

இரு கிராம மக்களும் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்சி பாராளுமன்றத் தொகுதிக்குட்ட பகுதி என்றபதால் மாலை திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வந்த அதிகாரிகள் வேங்கைவயல் கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும். எங்களுக்கு தனியொரு இடத்தில் குடியிருப்பு பகுதி ஏற்படுத்தி வீடுகள் கட்டித்தர வேண்டும், வாழ்வாதாரத்திற்கு விளைநிலம், தொழில் வசதி செய்து தர வேண்டும் என்று பல கோரிக்கைகள் முன் வைத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வழக்கு சம்மந்தமாக சிபிசிஐடி விசாரணை நடக்கிறது உங்களுக்கே தெரியும் விரைவில் கைது செய்வார்கள். மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் அதனால் வாக்குப்பதிவு செய்யுங்கள் என்று கூறினர். அதனையடுத்து மாலை 5 மணிக்கு பிறகு வேங்கைவயல் மக்கள் 59 வாக்காளர்களில்  53 பேர் இரவு 7 மணி வரை வாக்களித்தனர்.

அதேபோல இறையூர் கிராம மக்களிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு சென்ற போது, வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்யும் வரை எந்த தேர்தலிலும் வாக்களிக்க மாட்டோம் என்று கூறிவிட்டனர். சொன்னது போல முழுமையாக வாக்குப் பதிவை புறக்கணித்துவிட்டனர். இறையூர் கிராம மக்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வேங்கைவயல் மக்களின் 53 வாக்குகளுடன் சேர்த்து மொத்தமே 62 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்து இறையூர் மக்கள் முழுமையாக தேர்தலை புறக்கணித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேங்கை வயல் கிராம தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த சமூகவிரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும் வரை அனைத்து தேர்தல்களையும் புறக்கணிப்போம் என்பதில் இறையூர் கிராம மக்கள் ஒருங்கிணைந்து நிற்கிறோம் என்கின்றனர் இறையூர் மக்கள்.