ADVERTISEMENT

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி! 

12:56 PM Dec 15, 2023 | ArunPrakash

விருதுநகர் மாவட்டம் - சாத்தூரை அடுத்துள்ள பனையடிப்பட்டி கிராமத்தில் ஜெயபால் என்பவருக்குச் சொந்தமான ஜெயதர்ஷினி பட்டாசு தொழிற்சாலை உள்ளது. இன்று (15-ஆம் தேதி) காலை பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயன மூலப் பொருட்களைக் கலவை செய்யும் பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ரசாயன மூலப்பொருளில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக ஏற்பட்ட வெடி விபத்தில், கண்டியாபுரத்தைச் சேர்ந்த சண்முகராஜ்(36) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ADVERTISEMENT

மற்ற தொழிலாளர்கள் உயிர் பிழைத்துள்ளனர். அந்தப் பட்டாசு ஆலையின் ஒரு அறை தரைமட்டமானது. இவ்விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர், சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி முடிந்து பட்டாசு உற்பத்தி தொடங்கிய சில நாட்களிலேயே வெடிவிபத்து ஏற்பட்டதும், தொழிலாளி ஒருவர் பலியானதும், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT