Advertisment

'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' தமிழகத்தில் நாளை முதல் அமல்!

one nation one ration in tamilnadu

தமிழகத்தில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' நாளை (01/10/2020) முதல் அமலுக்கு வருகிறது.

Advertisment

இந்த திட்டத்தால் பிற மாநில ரேஷன் கார்டுதாரர்களும் தமிழக ரேஷன் கடைகளில் உணவுப்பொருட்களை வாங்க முடியும். ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகையைப் பதிவு செய்து, அரிசி, கோதுமை வாங்கலாம்; அதற்காக மத்திய அரசு நிர்ணயித்துள்ள தொகை வசூலிக்கப்படும். இடம் பெயரும் தொழிலாளர்களின் பசியைப் போக்க, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது.

Advertisment

இதனிடையே, தமிழகத்தில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' நாளை (01/10/2020) அமல்படுத்தப்படுவது தொடர்பாக தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதில், 'சென்னை, திருச்சி, அரியலூர், நாகை, கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை (01/10/2020) 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' அமலுக்கு வருகிறது. தூத்துக்குடி, தஞ்சை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' அக்டோபர் 16- ஆம் தேதி அமலாகிறது' என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் பழனிசாமி, நாளை 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை' தொடங்கி வைக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

cm palanisamy Tamilnadu one nation one ration
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe