Skip to main content

தமிழகத்தில் இன்று முதல் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்'!

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

 

one nation one ration tamilnadu

 

 

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழகத்தில் இன்று (01/10/2020) தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர் பழனிசாமி.

 

சோதனை அடிப்படையில் ஜனவரி 1- ஆம் தேதி முதல் நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் திட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று (01/10/2020) முதல் அமலுக்கு வருகிறது.

 

தூத்துக்குடி, தஞ்சை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 15- ஆம் தேதி முதல் 'ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்' அமல்படுத்தப்படுகிறது.

 

இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டு வைத்துள்ளோர் நாட்டின் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்