Skip to main content

'22 மொழிகளில் ஒரு மொழியை மட்டும் திணிக்கக் கூடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

'One language should not be imposed on 22 languages'- IP Senthilkumar speech

 

இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில இளைஞரணி செயலாளர் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அதேபோல் திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டத்தில் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தபால் துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாவட்டத் துணைச் செயலாளர் நாகராஜன், மாநில வர்த்தக அணி செயலாளர் ஜெயன், மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், அவைத்தலைவர்கள் காமாட்சி, மோகன், மாநகர பகுதி செயலாளர்களான ராஜேந்திரகுமார், ஜானகிராமன், அக்கு, சந்திரசேகர், பொருளாளர் சரவணன் மற்றும் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி பொறுப்பாளர்கள் உள்பட மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இந்திய திணிக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன குரல் எழுப்பினார்கள்.

 

'One language should not be imposed on 22 languages'- IP Senthilkumar speech

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''இந்தியாவில் 22 மொழிகள் உள்ளது அப்படி இருக்கும் போது ஒரு மொழியை மட்டும் பேசு என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். இது சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறது. இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களுக்குதான் உங்களை  தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். அதனால் மனசாட்சி படி நடந்து கொள்ள வேண்டும். இந்தி பேசாதே படிக்காதே என்று நாங்கள் சொல்லவில்லை. இந்தி படியுங்கள் அதோடு எத்தனை மொழி வேண்டுமானாலும் படிக்கலாம் ஆனால் இந்த மொழியை மட்டும் தான் இருக்க வேண்டும் என்று திணிக்கக்கூடாது இந்தியா உருவான காலத்திலிருந்து தமிழ் இருக்கு.

 

இந்தியாவில் ஒரு லட்சம் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதில் 65 சதவிகிதம் கல்வெட்டுகள் தமிழில் இருக்கிறது. மீதிதான் மற்ற மொழிகளில் இருக்கிறது. 1937இல் ராஜகோபாலாச்சாரியார் முதல்வராக இருந்தபோது பள்ளிகளில் இந்தியை கொண்டு வரவேண்டும் என்று சொன்னார்.  அதை எதிர்த்து போராட்டம் தொடங்கியது. அதைத்தொடர்ந்து அண்ணா, பெரியார், கலைஞர், ஸ்டாலின் என தொடர்ந்து தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் வரை எதிர்த்து வருகிறார்கள். மோடியும் அமித்ஷாவும் இதை பரிசீலனை செய்ய வேண்டும். உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு இந்த கருத்துக்களை திரும்ப பெற வேண்டும். இந்த ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. தற்போது  கல்வி நிறுவனங்களில் ஆங்கிலம் தான் முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இந்தியை திணிக்க பார்க்கிறார்கள். அதேபோல் போட்டி தேர்விலும் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியை கொண்டு வர நினைக்கிறார்கள்'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.