Skip to main content

சுண்டைக்காய் தகராறில் ஒருவர் தீக்குளிப்பு..!

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

One fire  Turkey berry issue

 

கள்ளக்குறிச்சி நகரிலுள்ள ராஜா நகரில் வசித்து வருபவர் சுப்ரமணியம் என்பவரின் மகன் சுரேஷ் வயது 42. இவரது மகள் பக்கத்துவீட்டை சேர்ந்த கொளஞ்சி என்பவரது தோட்டத்திலிருந்து சுண்டைக்காய் செடியிலிருந்து அதன் காய்களை  பரித்துள்ளார்.

 

இதனால் சுரேஷ், கொளஞ்சி ஆகிய இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் சுரேஷ் வீட்டுக்கு  விருந்தினராக வந்திருந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த சீத்தாராமன் என்பவரது மகன் சுரேஷ் என்பவர் சுண்டைக்காய் தகராறை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கொளஞ்சி மகன் வேலு, திருவண்ணாமலை சுரேசை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார் இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

 

சுண்டைக்காய்க்கு எவ்வளவு பெரிய பிரச்சனை உருவாகிவிட்டது என இந்த தகராறினால் மனமுடைந்த சினேகாவின் தந்தை சுரேஷ் நேற்று மாலை ஆறே முக்கால் மணி அளவில் குடிபோதையில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பரவி அவருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். தீக்காயம் பட்டு ஆபத்தான நிலையில் இருந்த சுரேஷிடம் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் 2 ராஜேஸ்வரி அவர்கள் வாக்குமூலம் பெற்றுள்ளார்.

 

இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுவாக எந்த விஷயத்திலும் என்ன பெரிய சுண்டைக்காய் விஷயம் இன்று  சாதாரணமாக மக்கள் பேசிக் கொள்வார்கள்  “சுண்டைக்காய் கால் பணம் அதன் சுமை கூலி முக்கால் பணம்” என்ற பழமொழிக்கு ஏற்றவாறு பக்கத்து தோட்டத்தில் சுண்டைக்காய் பறித்த சின்னப் பிரச்சனை பெரிதாகி தற்போது சுரேஷ் என்பவர் அதை கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொண்டு தீக்குளித்து  உயிருக்கு போராடிக் கொண்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனை தொடக்கம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 Vegetation sales start in mobile vehicles in Chennai

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும், தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

அதே சமயம் மழை பாதித்துள்ள பகுதிகளில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்ததால் போக்குவரத்து பாதித்து காய்கறிகளைக் கொண்டு வரும் லாரிகள் சென்னை நகருக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் காய்கறிகள் வரத்து குறைந்ததால் சென்னையில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் குறைந்த விலையில் காய்கறி விற்பனையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மழை பாதித்த இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் அனைத்து காய்கறிகளும் அரை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

 

Next Story

புரட்டாசி எஃபெக்ட்; ஒரே நாளில் 17 லட்சத்திற்கு விற்பனையான காய்கறிகள்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Puratasi Effect; 17 lakh worth of vegetables sold in farmers markets in a single day

 

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதத்தில் மக்கள் பெரும்பாலானோர் அசைவ உணவு வகைகளைத் தவிர்த்து சைவ உணவுகளை உண்பது வழக்கம். இதனால் இந்த மாதத்தில் காய்கறிகளின் தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

 

இந்நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியதை ஒட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் அதிக அளவில் காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். அனைத்து உழவர் சந்தைகளிலும் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. காய்கறிகளை அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.

 

ஈரோடு மாநகரில் உள்ள சம்பத் நகர் உழவர் சந்தைக்கு வரத்தான 22.58 டன் காய்கறிகள் ரூ.6 லட்சத்து 78 ஆயிரத்து 865 -க்கு விற்பனையானது. அதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் மொத்தம் வரத்தான 58.67 டன் காய்கறிகள் ரூ.17 லட்சத்து 2 ஆயிரத்து 122-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.