தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக்குறைந்திருந்தகரோனாபாதிப்பானது சில நாட்களாகஅதிகரித்துபதிவாகி வருகிறது.குறிப்பாகசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடங்களில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருக்கிறது. பல மாவட்டங்களில்கரோனாகட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்பொது இடங்களில்முகக்கவசம்அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் எனத் தமிழக மருத்துவத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்2,069பேருக்குகரோனாஉறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 2,385 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்கரோனாவுக்குசிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,094இருந்து 12,158 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,321 பேர்டிஸ்சார்ஜ்ஆகி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,025 பேருக்குகரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் மட்டும் 909 பேருக்குகரோனாபதிவு செய்யப்பட்டிருந்தது.செங்கல்பட்டில்-369 பேருக்கும், கோவை-118, குமரி-72, திருவள்ளூர்-121, காஞ்சிபுரம்-84, திருச்சி-67 பேருக்கு எனகரோனாபதிவாகியுள்ளது