One day impact close to 1500 again .. Today's corona situation in Tamil Nadu!

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,155லிருந்து அதிகரித்து 1,489 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட அதிகம். தமிழகத்தில் 1,470 பேருக்கும், வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து வந்த 19 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,03,607 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 682 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 589 என்று இருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது.

Advertisment

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,784 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 4 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 8,340 ஆக உள்ளது. ஒரே நாளில் 611 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரை 27,04,410 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவை-75, ஈரோடு-35, செங்கல்பட்டு-168, திருவள்ளூர்-70, வேலூர்-39, தூத்துக்குடி -36, காஞ்சிபுரம்-35,சேலம்-30, திருப்பூர்-44 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisment