Skip to main content

காட்பாடியில் சிக்கிய ஒரு கோடி மதிப்பிலான வெள்ளி... நான்கு பேரிடம் விசாரணை!

Published on 09/07/2021 | Edited on 09/07/2021

 

One crore worth silver seized in Katpadi

 

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினம் செல்லும் ரயிலில் திடீரென ரயில்வே போலீசார் மேற்கொண்ட ஆய்வில், 146 கிலோ வெள்ளிக் கட்டிகள், நகைகள், 32 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் வெள்ளி பணத்தைக் கொண்டு வந்த 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

 

சேலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், நித்தியானந்தம், பிரகாஷ், சுரேஷ் ஆகியோரை வருமானவரித்துறையினரிடம் ஒப்படைக்க ரயில்வே போலீசார் முடிவு செய்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்