Skip to main content

ஒரு கோடி... ஒரு கிலோ தங்கம்.. ஒரு கிலோ வெள்ளி... –முதல்வர் எடப்பாடி கொடுத்த பரிசு!

Published on 29/05/2019 | Edited on 29/05/2019

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தனது குடும்பத்துடன் ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதிக்கு செல்வது ரகசியமாக வைக்கப்பட்டது. 

 

 One crore ... a kilo gold .. a kilo silver ... -The gift of edappadi


 

நடந்து முடிந்த தேர்தலில் சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு அதிக பலம்  வரவேண்டும் என்று ஏற்கனவே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பதி சென்று முதல்வர் எடப்பாடி வேண்டிக் கொண்டு வந்தார். அதன் பிறகு தேர்தல் முடிந்த பிறகு அவர் எதிர்பார்த்தபடியே அதிமுக ஆட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லாமல் சரிநிகரான அதிக பலம் கிடைத்துள்ளது. 

 

 One crore ... a kilo gold .. a kilo silver ... -The gift of edappadi


இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி மீண்டும் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி தொடர தனது முன்மொழிவை செய்து வந்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை தனது குடும்பத்துடன் ஆந்திரா மாநிலம் திருப்பதி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பதி வெங்கடாஜலபதியை மனம் உருகி வேண்டியதோடு சில வேண்டுதலையும் வைத்துள்ளார். 

 


இதற்கிடையே ஏற்கனவே ஏழுமலையானை வேண்டியதை நிறைவேற்றுவதாக தனது மனைவியுடன் வந்த உறவினர்களிடம் திருப்பதி உண்டியலில் போடுவதற்காக கொண்டுசென்ற ரூபாய் ஒரு கோடி, மேலும் ஒரு கிலோ தங்கம், ஒரு கிலோ வெள்ளி என அனைத்தையும் திருப்பதி உண்டியலில் செலுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி.

 

 One crore ... a kilo gold .. a kilo silver ... -The gift of edappadi

 
நேரடியாக உண்டியலில் செலுத்தவில்லை. அவர் சாமி தரிசனம் செய்த பிறகு அவருக்குப் பின் வந்த அவரது மனைவி உறவினர்கள் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த பணத்தையும் பொருள்களையும் உண்டியலில் போட்டு வந்தனர். இதன்மூலமாக எடப்பாடி பழனிச்சாமி இன்னும் இரண்டு வருடம் தனது ஆட்சிக் காலம் நீடிக்கும் என்ற நம்பிக்கையோடு புறப்பட்டு வந்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.