Skip to main content

ஒருநாளைக்கு 1 கோடி ரூபாய் ‘முட்டை’ ஊழல்! தமிழக அரசை விசாரிக்க ஆணையம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2018 | Edited on 27/03/2018

ஏழை, எளிய குழந்தைகள் சாப்பிடும் சத்துணவு முட்டை வாங்கியதில் தமிழக அரசு, ஒருநாளைக்கு 1 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக பகீர் குற்றச்சாட்டு கிளம்பியிருப்பதோடு இதுகுறித்து விசாரணை நடத்த டெல்லியிலுள்ள காம்படீஷன் கமிஷன் ஆஃப் இந்தியா (Competition Commission of India) அதிரடி உத்தரவிட்டுள்ளது.
 

egg



இதுகுறித்து டெல்லியிலுள்ள ஆணையத்தில் முறையீடு செய்த சந்திரனின் வழக்கறிஞர் பொ.சோமசுந்தரம் நம்மிடம், “என்.இ.சி.சி. (National Egg Coordination Committee) எனப்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுதான் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் முட்டைகளின் விலையை நிர்ணயிக்கிறது. சட்டப்படி நிர்ணயிப்பதற்கான அங்கீகாரமோ அனுமதியோ இந்த தனியார் அமைப்புக்கு கிடையாது என்றாலும் பெரு முட்டை உற்பத்தியாளர்கள் உறுப்பினர்களாக இருந்துகொண்டு நிர்ணயம் செய்கிறார்கள்.

 

competion commission



 

NECC




தமிழ்நாட்டில் ஒருநாளைக்கு 3 ¼ கோடி முட்டை தயார் ஆகிறது. இதில், 90 சதவீதம் நாமக்கல்லில் உற்பத்தி ஆகிறது. இதில், சத்துணவுக்கூடங்களுக்கு ஒருநாளைக்கு 70 லட்சம் முட்டைகளை வாங்குகிறது தமிழக அரசு. வாரத்தில் ஐந்து நாட்கள் வாங்குகின்றன. ஆனால், சத்துணவுக்கூடங்களுக்கு வாங்கும் முட்டைகளின் அளவு 46 கிராம் இருந்தால் போதும் என்கிறது தமிழக அரசு. சராசரியாக 50 லிருந்து 55 கிராம் அளவு முட்டைதான் சந்தைகளுக்கு விற்பனைக்கு வந்தாலும் 46 கிராம் அளவுகொண்ட சிறுமுட்டைகளைத்தான் தமிழக அரசு சத்துணவுக்கூடங்களுக்கு கொள்முதல் செய்கிறது. இதில்தான், ஊழல் ஆரம்பிக்கிறது. எப்படி என்கிறீர்களா?

சராசரி முட்டையில் அளவைவிட குறைவாக உள்ள முட்டைகளின் விலையை குறைத்து விற்கலாம் என்றும் விலை நிர்ணயம் செய்திருக்கிறது என்.இ.சி.சி. அப்படியிருக்க, குறைந்த அளவு(46 கிராம்) கொண்ட முட்டைகளை விலை குறைத்து வாங்காமல் அதே பெரிய அளவுகொண்ட முட்டைவிலைக்கே வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டிற்கு முட்டை விலை நிர்ணயிக்ககூடிய மையம் நாமக்கல்தான். 2013 லிருந்து வருடாந்திர டெண்டர் மூலம் வாங்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஜூன் மாதத்தில் டெண்டர் விடுகிறது தமிழக அரசு. மற்றமாதங்களைவிட ஒவ்வொரு வருடத்தின் ஜூன் மாதத்திலும் முட்டை விலையை கூடுதலாக என்.இ.சி.சி. நிர்ணயத்திருப்பது தெரியவந்துள்ளது. இதை, வைத்து கணக்கிட்டுப் பார்க்கும்போது ஒருநாளைக்கு 1 கோடி ரூபாய் கூடுதலாக கொடுத்து சிறிய சைஸ் முட்டைகளை வாங்கி தமிழக அரசு ஊழல் செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து, ஆணையத்திடம் முறையிட்டபோது குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாகவும் இதுகுறித்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது ஆணையம்” என்கிறார் அவர்.

ஏழை எளிய குழந்தைகள் சத்துணவில்கூட ஊழல் செய்து உடல் பெருத்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக அரசின் சமூக நலத்துறை அதிகாரிகளும் அமைச்சரும்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.