காலையில் புத்தாடை உடுத்து கோவிலுக்கு சென்ற மக்கள் அதன்பிறகு வீடுகளில் கட்டப்பட்ட ஊஞ்சலில் ஒணப்பாட்டு பாடி ஆடி மகிழ்ந்தனர். அத்தப்பூ கோலத்தின் 10 ஆவது நாளான நேற்று அத்தபூக்கோலத்தில் திருவிளக்கேற்றி அவர்களின் நம்பிக்கையாக மாவேலி மன்னனை வரவேற்று பூஜைகள் செய்தனர். முதல் திருவோண நாளான நேற்று மதியம் 11 கூட்டு பொறியல் வகைகளுடன் மதியம் உணவு உட்கொண்ட மக்கள் இரவு கேரளா அரசு மற்றும் கலைஞர்கள் சார்பில் ஒவ்வொரு பகுதியில் நடத்தப்பட்ட கலைநிகழ்சிகளை கண்டு கழித்தனர். மேலும் திருவனந்தபுரத்தில் வெள்ளையம்பலத்தில் இருந்து கிழக்கே கோட்டை வரை சாலையின் இரு பக்கங்களின் அலங்காரிக்கப்பட்ட மின் விளக்குகளை மக்கள் குடும்பம் குடும்பங்களாக வந்து பார்த்து ரசித்து சென்றனர்.
இதே போல் அரசு அலுவலகங்கள் எல்லாம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கண்ணை கவரும் விதமாக உள்ளது. பல்வேறு பகுதியில் இரவு நடந்த கலை நிகழ்ச்சிகளை குடும்பத்தினருடன் மக்கள் கண்டு கழித்தனர். குமரி மாவட்டதிலும் மக்கள் ஒணம் பண்டிகையையொட்டி காலையில் இருந்தே அத்தப்பூ கோலப்போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தியதோடு பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் நடத்தினார்கள். இரவு பல்வேறு ஊர்களில் ஒணம் திருவிழா ஆடல் பாடல் என்று களை கட்டியது.