Skip to main content

பதுக்கப்படும் முக கவசம்... அச்சுறுத்தும் கொரோனா... விண்ணைத் தாண்டும் மாஸ்க்கின் விலை !

Published on 10/03/2020 | Edited on 10/03/2020

இன்றைய அளவில் உலக நாடுகளையும், உலக மக்களையும் அச்சுறுத்துவதோடு மக்களின் உறக்கத்தையும் பறித்த ஒரே சம்பவம் கொரோனா. கண்ணுக்குப் புலப்படாத இந்த வைரஸ், எதன் மூலம் மனிதர்களைப் பற்றுகிறது என்பதில் கூட தெளிவான அறிவிப்பில்லை. அதன்காரணமாக பலிகளும் உயர்வதோடு, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கூடுவதால் மக்கள் பதற்றத்தின் டெசிபல் எகிறியுள்ளது.

 

ominous corona ... face mask price hike...

 

வெளியே செல்லும் மக்கள் ஜனரஞ்சகமுள்ள இடங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் வெளியே சென்று விட்டு வருபவர்கள் கை கால் முகங்களைக் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். மக்கள் முன்னெச்சரிக்கையாக முகத்திற்கு மாஸ்க் அணிய வேண்டும் என்றும் பாதுகாப்பை அரசு அறிவிக்கிறது. டிமாண்ட் காரணமாக இதற்கு முன் சாதாரணமாகக் கிடைத்த மருத்துவ குணம் கொண்ட முக கவசமான மாஸ்க்கின் விலை, நினைத்துப் பார்க்க இயலாத அளவுக்கு தற்போது விலை விண்ணுக்குப் போய் விட்டது.

இது குறித்து தென்காசி மாவட்டத்தின் முக்கிய நகரின் மருத்துவர்கள் தங்களை அடையாளப்படுத்த விரும்பாமல் சொல்லுவதோ.,

இதற்கு முன்னர் சாதாரணமாக ஒரு மாஸ்க்கின் விலை 3.50 மற்றும் வரி சேர்த்து 4.00 ரூபாய் என்றிருந்தது. ஒரு பேக்கேஜ் 100 எண்ணிக்கைகளைக் கொண்ட மாஸ்க்கின் விலை 400 என்றிருந்தது கொரானா பீதி காரணமாக தற்போது ஒரு பேக்கேஜ் 400லிருந்து இரண்டாயிரம் ரூபாயாகப் பறந்து விட்டது. அதற்கும் தட்டுப்பாடு. இதனால், நோயாளிகளைப் பரிசோதிக்கவும், ஆபரேஷன் போன்ற முக்கியச் சிகிச்சைகளுக்குத் தேவையான மாஸ்க்குகள் கிடைக்காமல் நாங்கள் திண்டாட வேண்டியுள்ளது.

 

ominous corona ... face mask price hike...

 

தற்போதைய சூழலில் சாதாரண மக்களின் இந்த மாஸ்க் பயன்பாட்டு விஷயத்தில் அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவசர வலியுறுத்தல் விடுக்கிறார்கள்.

மேலும் விசாரித்ததில் முக கவசமான, மாஸ்க் செட்கள் கம்பெனியிலிருந்து வர வேண்டியுள்ளது என்கிறார்களாம் ஸ்டாக்கிஸ்ட்கள். ஆனால் அதே வேளையில் அவைகள் பதுக்கப்படுவதாகவும் தகவலுமிருக்கிறது என்கிறார்கள் பெயர் சொல்லவிரும்பாத மருத்துவர்கள்.

மக்களின் நலன் பொருட்டு மாஸ்க் விலை விஷயத்தில் அரசு உடனே தலையிட வேண்டுமென்பது மருத்துவர்கள் மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களும் விடும் அவசரகால கோரிக்கையாகியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.