ADVERTISEMENT

தமிழகத்தில் ஒமைக்ரான் புதிய திரிபு கண்டுபிடிப்பு

10:18 AM May 21, 2022 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் பிஏ-4 வகை ஒமைக்ரான் திரிபு கண்டுபிடிக்கபட்டுள்ளது.

தமிழகத்தில் பிஏ-4 வகை ஒமைக்ரான் புதிய திரிபுக்கு ஒருவர் பாதிக்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர், “தமிழகத்தில் ஒரு படுக்கையில்கூட கரோனா நோயாளிகள் இல்லை. சமீபத்தில் ஒருவருக்கு பிஏ-4 வகை கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர் கரோனா தொற்றிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டார். அவருடன் இருந்த யாருக்கும் பாதிப்பில்லை” எனத் தெரிவித்தார்.

பிஏ-4 வகை ஒமைக்ரான் திரிபு முதன்முதலாக ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT