Skip to main content

'ஒமிக்ரான்' தடுப்பு நடவடிக்கை- தமிழ்நாடு முதலமைச்சர் இன்று ஆலோசனை!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

omicron coronavirus prevention tamilnadu chief minister mkstalin discussion for today

 

'ஒமிக்ரான்' தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24/12/2021) ஆலோசனை நடத்துகிறார். 

 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (24/12/2021) காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். 

 

இந்த கூட்டத்தில் கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளைத் தீவிரப்படுத்துவது, கட்டுப்பாடு விதிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளார். 

 

தமிழ்நாட்டில் 'ஓமிக்ரான்' வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்