சென்னையில் ஓஎல்எக்ஸ் மூலம் இருசக்கர வாகனம் வாங்குவதாக கூறி நேரில் சந்தித்து வாகனத்தை ஓட்டிப்பார்ப்பதாக கூறி வாகனத்துடன்டாடா காட்டி விட்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த வாலிபர் அப்துல். இவர்தனது விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றை ஓஎல்எக்ஸ் எனும் இணையதளத்தின் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான விளம்பரத்தை அதில்பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர்தான் அந்த இருசக்கர வாகனத்தை வாங்க ஆசைப்படுவதாகஅப்துலுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கூறியுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இதனை நம்பி ராயபுரம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அருகில் அப்துல் சென்றுள்ளார். அதே இடத்திற்கு ஆட்டோவில் வந்த அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தின் ஆர்.சி புக் உட்பட அனைத்தையும் சோதிப்பது போன்று செய்துவிட்டு. வாகனத்தை ஓட்டி பார்க்க விரும்புவதாக கூறி பைக்கை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார். இதுகுறித்து அப்துல் ஏழுகிணறு போலீசாரிடம் புகாரளிக்க இது தொடர்பாக போலீசார் விசாரித்து வந்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இந்த விசாரணையில் அந்த நபர் ராயபுரம் ஆட்டோவில் வந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து அவன் இலங்கையை சேர்ந்தநிரோஷன்என்பதும் இதேபோல் பல இருக்கசக்கர வாகனங்களை திருடியன்என்பதும் தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் நிரோஷனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.