Skip to main content

இரு தரப்பினரிடையே மோதல்; மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு

Published on 05/12/2022 | Edited on 05/12/2022

 

old women age burial coimbatore

 

 

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒன்னக்கரசம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கம்மாள். 102 வயதான இவர், அந்த கிராமத்திலும், சுற்று வட்டாரங்களிலும்  மூத்தவராக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று வயது மூப்பின் காரணமாக, ரங்கம்மாள் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து  ரங்கம்மாளின் உறவினர்கள், அவரது உடலை பொது மயானத்தில் அடக்கம் செய்யக்  கொண்டு சென்றனர்.

 

அந்த சமயம் பார்த்து, ரங்கம்மாளின் உடலை அடக்கம் செய்வதற்கு, மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, ரங்கம்மாளின் உடலைச் சாலையின் நடுவில் வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த  கோவை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில், பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

 

ஆனால், ரங்கம்மாளின் உறவினர்கள், ''நாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த மயானத்தை, தற்போது  பாலம் கட்டி சுருக்கி விட்டனர். அங்குப் புதைப்பதற்கு இடமில்லை. எனவே இங்குதான் புதைப்போம் எனத் தெரிவித்தனர். இதற்கு, எதிர் தரப்பினர்  மறுப்பு தெரிவித்ததால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை  இந்த போராட்டம் நீடித்தது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

மேலும், மயானத்துக்கு தேவையான இடத்தை, தமிழக அரசே தருவதாக, போலீசார் வாக்குறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து, ரங்கம்மாள் உடலை ஏற்கனவே பயன்படுத்திவந்த மயானத்திலேயே புதைப்பது என, முடிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் கோவை மாவட்டம்  முழுவதும் பிரட்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.