Skip to main content

பழைய சம்பளம் வழங்கும் முறையையே கடைபிடிக்க வேண்டும் - தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம்

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

 

தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் இன்று சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தினர். இதில், அனைத்து அரசு அலுவலங்களிலும் ஏற்கனவே உள்ள சம்பளம் வழங்கும் நடைமுறையையே தொடர வேண்டும். அரசு அலுவலகங்களில் பல நேரங்களில் சர்வர் சரியாக வேலை செய்யாததால், பணி நேரம் இரவு வரை நீடிக்கிறது. மேலும் மாதந்தோறும் சம்பளம் சரியான தேதியில் வராமல் இருக்கிறது. என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.  இதற்கு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் தலைவர் மு.அன்பரசு தலைமை தாங்கினார். இதில் மாநில, மாவட்டம், வட்டம் என ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  பிறகு அவர்களின் கோரிக்கையை கருவூல கணக்குத்துறை ஆணையரிடம் மனுவாக அளித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

CM MK Stalin gave a surprise to CM MK Stalin gave a surprise to the government employeesthe government employees

 

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 42 சதவீத அகவிலைப்படி, 01.07.2023 முதல் முன்தேதியிட்டு 46 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் நலனுக்காக அரசு வகுக்கும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் அரும்பணியில், அரசோடு இணைந்து பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை இந்த அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது. முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது.

 

அவ்வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்து மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2546.16 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

 

Next Story

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

Central government employees increase in allowances

 

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவிக்கையில், “மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்” என தெரிவித்தார்.