Skip to main content

பழைய 500 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் தவிக்கும் முதியவர்...

Published on 30/10/2020 | Edited on 30/10/2020

 

An old man who suffers from not being able to change old 500 rupee notes ...

 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகில் உள்ள குணமங்கலம் காலனி கிழக்கு தெருவில் வசிப்பவர் 75 வயது பெரியசாமி. இவருடைய மனைவி பவுனம்மாள். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை வயது மூப்பின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பெரியசாமி மனைவி பவுனாம்பாள் இறந்துவிட்டார். மனைவி இறந்த பிறகு பெரியசாமி மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.


இந்த நிலையில் இறந்து போன அவரது மனைவி பயன்படுத்திவந்த பழைய பெட்டியை பெரியசாமி சில நாட்களுக்கு முன்பு திறந்து சுத்தம் செய்துள்ளார். அப்போது அந்த பெட்டியில் அவரது மனைவி வைத்திருந்த சேலைகளுக்கு மத்தியில் பழைய 500 ரூபாய் நோட்டுக்கள் இருந்துள்ளன. அவைகளை எடுத்து எண்ணிப் பார்த்ததில் மொத்தம் 20,000 ரூபாய் இருந்துள்ளது. 


பணமதிப்பிழப்பு காரணமாக அந்த பழைய 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது குறித்து விபரம் தெரியாத பெரியவர் பெரியசாமி, அந்த நோட்டுகளை எடுத்துக் கொண்டு மளிகை பொருட்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்றுள்ளார். அங்கு 500 ரூபாய் கொடுத்து பொருட்கள் கேட்டபோது இந்தப் பணம் செல்லாது இது பழைய 500 ரூபாய் நோட்டு என்று கூறியுள்ளனர். இதை மாற்றுவதற்கு என்ன வழி என்று பலரிடமும் பெரியசாமி விசாரித்துள்ளார். 


வங்கிகளில் சென்று கேட்டு பார்க்குமாறு கூறியுள்ளனர். பெரியசாமி  20 ஆயிரம் ரூபாய் பழைய 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள பல வங்கிகளுக்கும் சென்று பழைய 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு புதிய நோட்டுகளை தருமாறு கேட்டுள்ளார். வங்கி ஊழியர்கள் இந்த ரூபாய் நோட்டுகள் தற்போது செல்லாது இதற்கான காலக்கெடு முடிந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கூறியுள்ளனர். இதன் பிறகு பெரியவர் பெரியசாமி அந்த பழைய ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு இந்த நோட்டுக்களை கொடுத்துவிட்டு புது ரூபாய் நோட்டுக்களாக எப்படிப் பெறுவது யாரிடம் போய் கேட்பது என்று எந்த விபரமும் புரியாமல் கைநிறைய 20,000 பணம் இருந்தும், அது உபயோகம் இல்லாமல் வறுமையில் பரிதவித்து வருகிறார். அந்த ஏழை முதியவருக்கு அரசு அதிகாரிகள் அந்தப் பழைய பணத்தை புதிய பணமாக மாற்றுவதற்கு உதவி செய்வார்களா? அது சாத்தியப்படுமா? என்ற குழப்பத்தோடு பரிதவிப் போடும் கேட்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ஊழியர் ஏமாற்றம்; லட்சக்கணக்கில் மோசடி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
18 lakh rupees scam by IT employee claiming profit from stock trading

திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(46) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பகுதி நேர வேலை என்ற ஒரு லிங்கை டவுன்லோட் செய்தார். அப்போது அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித் தருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனை நம்பிய ராமச்சந்திரன், மோசடி நபர்கள் கூறிய 8 வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக கடந்த 3 மாதத்தில் ரூ.18 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அவருக்கு லாபத் தொகையும் தரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்பத் தராமல் ஏமாற்றிவிட்டனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட ராமச்சந்திரன், இதுகுறித்து ஆன்லைன் மூலமாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story

ஆருத்ரா மோசடியில் அடுத்த பகீர்; பறக்கவிருக்கும் சம்மன்கள் 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Investment in film production; Arudra fraud towards next level

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை.

இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். இது தொடர்பாகத் தற்போது வரை 23 பேரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளி ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் முனைப்பு காட்டும் அதே நேரத்தில் மோசடி செய்யப்பட்ட பணம் எப்படி எல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் மறுபக்கம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் மோசடி பணம் சினிமாவில் முதலீடு செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சினிமாவில் எந்தெந்த படங்களுக்கு பைனான்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 'ஆருத்ரா பிக்சர்ஸ்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட திரைப்படத் தயாரிப்புகள் குறித்தும் போலீசார் விசாரணையைத் துருவி வருகின்றனர். மோசடி பணத்தில் சினிமா துறையில் பணம் கை மாற்றப்பட்ட நபர்கள் பற்றி விசாரித்து சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தவும்  தற்பொழுது முடிவெடுத்துள்ளது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை.