
பழனி கோவிலுக்கு படிப்பாதை வழியாகச் சென்ற வயதான நபர் ஒருவர் பாதி வழியில் நெஞ்சுவலி ஏற்பட்டு உதவி கிடைக்காமல் தவிக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் எப்பொழுதுமே கணிசமான பக்தர்கள் கூட்டம் இருக்கும். இந்த நிலையில் பழனி மலை கோவிலுக்கு படிப்பாதை வழியாக சென்ற முதியவர் ஒருவர் பாதி வழியில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் கீழே விழுந்தார். உடனடியாக மருத்துவ உதவி கிடைக்காததால் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் கீழே உள்ளவர்களை தொடர்பு கொண்டிருந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow Us