Skip to main content

கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் அடித்துக் கொலை; மர்ம நபர்கள் நள்ளிரவில் வெறிச்செயல்!     

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

old man was beaten to passed away while sleeping on a bed in Namakkal

 

நாமக்கல் அருகே, கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரை நள்ளிரவில் மர்ம நபர்கள் கட்டில் காலால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.    

 

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்ரமணி (70). ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான  இவர், ஒலிபெருக்கிக் கடை நடத்தி வந்தார். இத்துடன், அதிமுக பேரூர் செயலாளர் மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் கடையிலும் வேலை செய்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் பாஸ்கரின் வீட்டின் பின்புறம் உள்ள வீட்டில் சுப்ரமணி தனியாக வசித்து வந்தார். ஜூன் 5 ஆம் தேதி இரவு வழக்கம்போல் பணிகளை முடித்துக்கொண்டு, வீட்டின் முன்பு கட்டிலில் படுத்துத் தூங்கினார். அப்போது மர்ம நபர்கள், கட்டில் காலை உடைத்து, அந்த கட்டையால் சுப்ரமணியின் தலையில் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் நிகழ்விடத்திலேயே பலியானார்.

 

அன்றாடம் காலையில் அருகில் வசிக்கும் மூத்த மகனின் வீட்டுக்கு தேநீர் குடிக்கச் செல்லும் சுப்ரமணி காலையில் வரவில்லை.  இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் சுப்ரமணியை தேடிச்சென்று பார்த்தபோதுதான் அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது  தெரிய வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், இதுகுறித்து நாமகிரிப்பேட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தை மீட்ட காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்தனர். தடய அறிவியல் நிபுணர்கள் நிகழ்விடத்தில் தடயங்கள், விரல் ரேகைகளை சேகரித்தனர். மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டது.  மோப்ப நாய், நிகழ்விடத்தில் இருந்து மலையம்பட்டி சாலையில் ஒரு கி.மீ. தொலைவிற்கு ஓடிச்சென்றுவிட்டு திரும்பவும் வந்துவிட்டது.

 

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையுண்ட சுப்ரமணிக்கு யாருடனாவது முன்விரோதம்  இருந்ததா? அவர் வீட்டில் ஏதேனும் பணம், நகைகளை சேர்த்து வைத்துள்ளாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து  வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.