ஈரோடு ரயில் நிலையத்திற்கும் தொட்டிபாளையம் ரயில் நிலையத்திற்கும் இடையே உள்ள தண்டவாளத்தில்55 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்குத்தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஈரோடு ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற எந்த விபரமும் தெரியவில்லை. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ரயில் வருவதைக் கவனிக்காமல் தண்டவாளத்தைக் கடந்த போது ரயில் மோதி அந்த நபர் இறந்தது தெரியவந்தது.