Skip to main content

மூதாட்டி கொலை... பள்ளி மாணவன் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு 

Published on 13/12/2019 | Edited on 13/12/2019

 

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ளது மேலக்கல் பூண்டி. இந்த ஊரை சேர்ந்த ஐயாசாமி மனைவி பொன்னம்மாள். வயது 65. இவர் கடந்த மாதம் ஒன்றாம் தேதி தலையில் பலத்த காயத்துடன் ரத்தம் வழிந்த நிலையில் அவரது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்த ராமநத்தம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் போலீசார் பொன்னம்மாளை உடனடியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

 

old lady



அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 4ஆம் தேதி மூதாட்டி பொன்னம்மாள் இறந்துபோனார். உடனே போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த பகுதியை சேர்ந்த பலரையும் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்தனர்.
 

இந்த நிலையில் வடகரா பூண்டி கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜிடம், ''பாட்டியை கொலை செய்தது நான்தான்'' என்று ஒப்புக்கொண்டு ஒரு பள்ளி மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார். உடனே கிராம நிர்வாக அலுவலர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் அந்த பள்ளி மாணவனை கைது செய்து விசாரித்தபோது, அவன் அளித்த வாக்குமூலத்தில் பாட்டி பொன்னம்மாளின் வீட்டின் அருகில் கிழக்கில் பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்தப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பொன்னம்மாள் தன் தோட்டத்தில் விளையும் பலவிதமான பழங்களை விற்பனை செய்வது வழக்கம். அதனால் பொன்னம்மாள் வீட்டிருக்கு நிறைய பள்ளி மாணவ மாணவிகள் அவ்வப்போது சென்று வருவது உண்டு.
 

சில நாட்களுக்கு முன்பு அந்தப் பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவன் ஒருவன் அந்த பாட்டியிடம் பழம் வாங்கி கொண்டு அதற்குப் பதிலாக வெளிநாட்டு கரன்சி பணத்தைக் கொடுத்துள்ளான். விவரம் தெரியாமல் பணத்தை வாங்கிய பாட்டி பிறகு அதை மற்றவரிடம் காட்டியபோது அது வெளிநாட்டு பணம் இங்கு செல்லாது என சொன்னதும் கோபத்துடன் அதை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்ற பாட்டி, சம்பந்தப்பட்ட மாணவனிடம் என்னை ஏமாற்ற பார்த்தாயா என அவனை பலர் முன்னிலையில் கேட்டுள்ளார். 
 

பாட்டி தன்னை திட்டியதை மாணவன் அவமானமாகக் கருதினான். பாட்டியிடம் பணப்புழக்கம் உள்ளதை பார்த்துள்ளான். தன் தாயிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டுள்ளான். அவர் தர மறுத்துள்ளார். இதனால் பாட்டி மீது உள்ள கோபத்திலும், தாய் செலவுக்கு பணம் தாராததாலும் பாட்டியிடம் உள்ள பணத்தை திருடுவது என  திட்டமிட்டு, அதன்படி ஒன்றாம் தேதி இரவு அந்த பாட்டி வீட்டருகே சென்றவன், நடு இரவில் வீட்டுக்குள் சென்று பாட்டி வைத்திருந்த பணத்தையும் செல்போனையும் திருடியுள்ளான். 


 

 

சத்தம் கேட்டு எழுந்த பாட்டி பொன்னம்மாள் அந்த மாணவனை கையும் களவுமாக பிடித்து விட்டார். சத்தம்போட்டு அக்கம் பக்கத்தினரை அழைக்க முயலும்போது கோபமுற்ற சிறுவன், பாட்டி தன்னை காட்டிகொடுத்து விடுவாரோ என அச்சமடைந்து, அருகில் கிடந்த டார்ச் லைட்டை எடுத்து பாட்டியின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளான்.


 

 

பாட்டி ரத்தவெள்ளத்தில் மயங்கி சரிந்ததும் சிறுவன் பணத்தையும் பாட்டியின் செல்போனையும் எடுத்து கொண்டு சத்தமில்லாமல் சென்றுவிட்டான். இந்த நிலையில் போலீசார் பாட்டியோட செல்போன் பற்றி கண்டறிய டவரை வைத்து ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் அந்த செல்போன் அந்த மாணவனின் தாயிடம் இருப்பதை கண்டறிந்தனர். அவரை 'அழைத்து கடுமையாக விசாரித்தனர் அப்போது வேறு வழியில்லாமல் மாணவன் தானே முன்வந்து பாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டான். அவனை கைது செய்த  போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி  கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கொண்டு சென்று அந்த சிறுவனை அடைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தந்தை உயிரிழந்த போதும் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 student who wrote her 12th class exam despite  passed away of her father

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தினவடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை(15.3.2024) காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.  இவரது மகள் ராஜேஸ்வரி வயது 16 இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.  இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுத செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.