Skip to main content

“வாழ விடமாட்றாங்க.. அரிவாள் தூக்கிட்டு வெட்ட வராங்க..” - பெற்ற பிள்ளைகளால் ஆபத்தென கண்கலங்கும் மூதாட்டி!  

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

Old couple came to District commissioner offer to compliant about children

 

நாகை அருகே மகன்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வயதான மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க புகார் அளித்திருப்பது அங்கிருந்தவர்களைக் கலங்கடிக்கச் செய்துள்ளது.

 

நாகை மாவட்டம், திட்டச்சேரியை அடுத்த பா.கொந்தை மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம்மாள். 80 வயதுடைய மாணிக்கம்மாளுக்கும், 90 வயதுடைய அவரது கணவர் சிங்காரவேலுவுக்கும்தான் அந்தக் கொடுமை நடந்திருக்கிறது.

 

வயதான கணவரோடு தள்ளாடியபடியே நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார் வயதான பாட்டி மாணிக்கம்மாள். அந்தப் புகார் மனு குறித்து அவரிடம் நாம் கேட்டபோது, "தள்ளாடுற வயதில் நடக்கவே முடியாத என்னோட கணவருடன் கஷ்டப்பட்டுவருகிறேன். படுக்கையிலயே தன்னால நீர் கழிச்சிடுறாரு. எனக்கு நாலு பிள்ளைங்க. மூத்தவனும், இளையவனும் எங்களுக்கு உதவாட்டியும், தொந்தரவு செய்யுறது இல்ல. ஆனா இரண்டாவது மகனும், மூனாவது மகனும் பொண்டி, பிள்ளைங்க பேச்சக் கேட்டுக்கிட்டு அடிக்கிறானுங்க. 

 

மூத்த மகன் துரைராஜ் வீட்டில் இருக்கிறோம். வீட்டுக்காரர் படுக்கையிலயே சிறுநீர், மலம் கழிச்சிடுறதால, மூத்த மகனின் வீட்டிலும் சில சங்கடங்களை சந்திக்க நேர்ந்தது. அதனால், என்னோட தந்தையின் அரவணைப்போடு முப்பத்தைந்து வருஷம் காலத்த ஓட்டினேன், அவரு உயில் மூலம் எனக்கு கொடுத்த இடத்துல, ஒய்வூதிய பணத்த வச்சி, குழுவுல கடன் வாங்கி, எனக்கு சொந்தமான இடத்திற்குச் சென்று பழுதடைந்த வீட்டினை சரி செய்யச் சென்றால் என்னையும், எனது கணவரையும் அடிக்கப் பாய்ந்து கொலை செய்ய வராங்க. அரிவாள் தூக்கிட்டு வெட்ட வராங்க, நடுமகன் பழநியும் அவரது குடும்பத்தினரும். மேலும், படாத கொடுமை செய்யுறாங்க.

 

நாலு பிள்ளைங்கள பெத்தோம், சாகப்போற காலத்துல கால் வயிற்று கஞ்சி ஊத்தாட்டியும் பரவாயில்ல. இருக்குறவரைக்கும் அவங்க எப்படியாவது வாழ்ந்துட்டு போகட்டும்னுகூட விடமாட்டேங்குறாங்க. இருக்க இடமில்லாமல் சாகப்போற காலத்துல தவிக்கிறோம். வயதான எங்களின் நிலமை அறிந்து பாதுகாப்பு தர வேண்டும்" என கண் கலங்குகிறார் மாணிக்கம்மாள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.