Skip to main content

ஓலா டாக்ஸி ஓட்டுநர் வாடிக்கையாளர்களால் கழுத்தறுத்து கொலை... சென்னை அருகே அதிர்ச்சி!

Published on 29/06/2022 | Edited on 29/06/2022

 

Ola taxi driver strangled to by customers ... shock near Chennai!

 

சென்னை அடுத்த செங்கல்பட்டில் ஓலா கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தில் ஓலா கால் டாக்ஸி புக் செய்த வாடிக்கையாளர்களே ஓட்டுநரைக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை அடுத்த சோளிங்கநல்லூர் அரசன்காலனி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுன். அர்ஜுன் 'ஓலா' எனும் பிரபல தனியார் கால் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஓலாவில் கால் டாக்ஸி புக் செய்த வாடிக்கையாளர்களை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு அருகே சென்றுகொண்டிருந்தபோது டாக்ஸியில் வந்த 3 பேர் அர்ஜுனைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அவரின் காரை திருடிச் சென்றனர். சாலையின் ஓரமாக கிடந்த அர்ஜுனின் உடலை போலீசார் கைப்பற்றிய நிலையில் மேல்மருவத்தூர் மேம்பாலத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது காரையும் கைப்பற்றினர்.

 

இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இரவு நேரத்தில் ஓலா செயலில் டாக்ஸி புக் செய்த நம்பர்களை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்தபொழுது இந்த கொலை குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

 

kk

 

பெரம்பலூர் மாவட்டம் கரியனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த பிரசாத், அந்த பணி பிடிக்காததால் சென்னை கோயம்பேட்டில் உள்ள பழக் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.  இந்நிலையில் ஊரிலிருந்து திருமூர்த்தி, கட்டிமுத்து ஆகிய இரண்டு நண்பர்கள் பிரசாத்தை தேடி கோயம்பேடு வந்துள்ளனர். மூன்று பேரும் சேர்ந்து விழுப்புரம் அருகே பாதுகாப்பில்லாமல் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினர். அதனைத் தொடர்ந்து கோயம்பேட்டில் கால் டாக்ஸி ஒன்றை புக் செய்து அங்கிருந்து தாம்பரம் மெப்ஸ் வரை சென்றுள்ளனர். அந்த காரில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்பட்டு இருந்ததால் கார் மெதுவாகச் சென்றுள்ளது. இதனால் அந்த டாக்ஸியிலிருந்து இறங்கி ஓலா செயலியில் காரை புக் செய்தனர். அப்பொழுது இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட அர்ஜுன் தனது காருடன் அங்கு வந்து மூன்றுபேரையும் ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார். அப்பொழுது ஏடிஎம் இயந்திரத்தைக் கொள்ளையடிப்பது தற்பொழுது முடியாது எனத் தீர்மானித்த மூவரும் காரை திருடிவிடலாம் என முடிவெடுத்து ஓட்டுநர்  அர்ஜுனைக் காரை விட்டு இறங்கிச் செல்லுமாறு கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். அப்பொழுது வாக்குவாதம் ஏற்பட்டதால் அர்ஜுனின் கழுத்தை அறுத்து வெளியே தள்ளிவிட்டு காரை எடுத்துக் கொண்டு மூவரும் தப்பித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இறுதியில் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் மூன்று பேரும் காரை மேல்மருவத்தூர் பாலத்தில் விட்டுவிட்டுச் சென்று விட்டனர். அதன்பிறகு பேருந்து ஏறி சொந்த ஊருக்கும் சென்று விட்ட நிலையில் இந்த சம்பவத்தில் 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  

 

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சிறிது தூரம் ரத்தம் சொட்டச் சொட்ட நடந்துவந்த ஓட்டுநர் அர்ஜுன் ஒருகட்டத்தில் நடக்க முடியாமல் உயிரிழந்து சாலையில் கிடந்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.