Skip to main content

ஓலா கார் ஓட்டுநர் தாக்கியதில் வாடிக்கையாளர் உயிரிழப்பு... செங்கல்பட்டு அருகே ஒரு அதிர்ச்சி சம்பவம்!

Published on 04/07/2022 | Edited on 04/07/2022

 

Ola car driver hit him... a shocking incident near Chengalpattu!

 

கடந்த வாரம், ஓலா கால் டாக்ஸி டிரைவர் வாடிக்கையாளராக வந்த சிலரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சென்னை அருகே ஓலா கார் டாக்ஸி ஓட்டுநர் தாக்கியதில் வாடிக்கையாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Ola car driver hit him... a shocking incident near Chengalpattu!

 

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ளது கன்னிவாக்கம் கிராமம். கன்னிவாக்கம் கிராமம் குந்தன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் உமேந்தர். கோவையில் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்த உமேந்தர், வார இறுதியில் சொந்த ஊரான கன்னிவாக்கத்திற்கு வருவது வழக்கம். எப்பொழுதும்போல் கடந்த வெள்ளிக்கிழமை கன்னிவாக்கத்தில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார் உமேந்தர். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை குடும்பத்துடன் சினிமா பார்ப்பதற்காக மனைவி பவ்யா, குழந்தைகள், சகோதரி மற்றும் அவரது இரு குழந்தைகள் உட்பட ஏழு பேருடன் ஷாப்பிங் மாலுக்கு சென்றுள்ளார். பின்னர் படம் பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக மனைவி பவ்யாவின் சகோதரி தேவிபிரியாவின் செல்போனிலிருந்து உமேந்தர் ஓலா கால் டாக்ஸி புக் செய்துள்ளார்.

 

Ola car driver hit him... a shocking incident near Chengalpattu!

 

சிறிது நேரத்தில் அங்கு வந்த இன்னோவா காரில் அனைவரும் ஏறிக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து ஓலா கார் ஓட்டுநர் ரவி  பயணத்தை தொடங்குவதற்கான ஓ.டி.பி எண்ணை சொல்லுமாறு கேட்டுள்ளார். அப்பொழுது உபேந்தர் தனது செல்போனை சோதித்துப் பார்த்துவிட்டு ஓ.டி.பி வரவில்லை என தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர் ஓ.டி.பி வரவில்லை என்றால் காரை விட்டு இறங்குங்கள் என காட்டமாக கூறியுள்ளார். அதற்கு உபேந்தர் இறங்க முடியாது என தெரிவித்துள்ளார். இப்படி ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியது. அதன் பிறகு காரை விட்டு இறங்கிய உமேந்தர் காரின் கதவை 'சடார்...' என்று வேகமாக சாத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் ரவி 'ஏன் கார் கதவை வேகமாக சாத்தினாய்' என்று கேட்டு உமேந்தரை அடித்துள்ளார். உமேந்தரும் பதிலுக்கு கையில் இருந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டிலால் ரவியை அடித்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் சரமாரியாக உமேந்தரை ரவி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்தார் உபேந்தர். அங்கிருந்த பொதுமக்கள் உபேந்தரை மீட்டர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர்  உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

இந்த சம்பவத்தில் தப்பி ஓட முயன்ற ஆலோ ஓலா கார் ஓட்டுநர் ரவியை பிடித்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வ.உ.சி நகரைச் சேர்ந்த ஓலா ஓட்டுனர் ரவி மீது கொலை வழக்குப்பதிவு செய்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் செங்கல்பட்டு அருகே ஓலா டாக்சி ஓட்டுநர் வாடிக்கையாளர்களாக வந்த திருடர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ஐடி ஊழியர் ஒருவர் ஓலா கார் ஓட்டுநரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது