Skip to main content

100 நாள் வேலை; பெண்களை மிரட்டும் அதிகாரிகள்

Published on 26/09/2023 | Edited on 26/09/2023

 

Officials threaten women with 100-day work

 

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டம் என்றழைக்கப்படும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. தற்போது, இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.

 

இத்தகைய சூழலில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதிக்குட்பட்ட எல்லையில் அமைந்துள்ளது வேளஞ்சேரி ஊராட்சி. வேளஞ்சேரி ஊராட்சியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தில் இருக்கும் மிகப்பெரிய ஏரியில் நான்கு ஐந்து அடி ஆழத்தில் தண்ணீருக்குள் நடந்து சென்று ஆபத்தான பகுதியில் வேலை செய்ய வைப்பதாகப் பணி செய்யும் பெண்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்றனர். மேலும் இப்படி ஆபத்தான முறையில் தண்ணீருக்குள் இறங்கிச் சென்று வேலை செய்யும்பொழுது சில நேரத்தில் பாம்புகள் கூட கடிப்பதாகக் கூறுகின்றனர்.  அதுமட்டுமின்றி, எங்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்து உயிர் போகும் நிலை ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வது எனப் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். 

 

அதே நேரம் இந்த பகுதியைச் சேர்ந்த வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள், தங்களுக்கு ஏரியைக் கடந்து தான் பணிகளை ஒதுக்குவதாகவும் தங்களை அங்குதான் வேலை செய்ய வேண்டும் எனக் கூறுவதாகப் பகிரங்கமான குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், இங்கு நடக்கும் அவலங்கள் குறித்து டிவியிலோ மீடியாக்களிலோ பேட்டி கொடுத்தால் உங்களை அடுத்த நாளே 100 நாள் வேலையில் இருந்து துரத்தி விடுவோம் என்று அதிகாரிகள் மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்து வெளியே கூறாமல் இந்த அவலத்திலேயே வாழ்ந்து வந்துள்ளனர். 

 

Officials threaten women with 100-day work

 

ஒருகட்டத்தில் விரக்தியடைந்த அப்பகுதி மக்கள், இந்த சம்பவம் குறித்துப் பேச ஆரம்பித்துள்ளனர். இப்படி பெண்களை அடிமை போல் திருத்தணி வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆபத்தான முறையில் பணி செய்ய வைக்க வேண்டுமா? வேறு எங்கும் பணிகள் இவர்களுக்கு ஒதுக்க முடியாதா? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இந்நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக 100 நாள் பணிகளில் ஏற்படும் முறைகேடுகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோல் நடக்கும் அசம்பாவித பணிகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 27 பஞ்சாயத்து பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது, 100 நாள் வேலைத் திட்டத்தில் நடக்கும் அவலங்கள் குறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை!

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
100 days holiday with pay for scheme workers on election day

தேர்தல் நாளன்று வாக்களிக்க வசதியாக, நூறு நாள் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் கிராமப்புற தொழிலாளர்களுக்கு குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

இதையொட்டி அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிலகங்களுக்கும் ஒருநாள் ஊதியத்துடன் விடுப்பு விடப்பட்டு உள்ளது. அதேபோல், 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் வாக்குப்பதிவு நாளன்று இத்திட்டத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கும் ஒரு நாள் ஊதியத்துடன் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாஹூ அறிவித்துள்ளார்.