Skip to main content

நக்கீரன் இணையச்செய்தி எதிரொலி - மழை நீரில் சேதம் அடைந்த நெற்பயிர்களை ஆய்வு செய்த அதிகாரிகள்

Published on 05/11/2022 | Edited on 05/11/2022

 

gf

 

சிதம்பரம் அருகே 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தில் நெற்பயிர் மற்றும் நாற்றங்கால் மழை மற்றும் கொள்ளிடம் ஆற்று நீரால் வீணாகி உள்ளது என நக்கீரன் இணையச் செய்தியின் எதிரொலியாக வேளாண் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

 

சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம், வடக்கு பிச்சாவரம், கீழத்திருக்கழிப்பாலை, மேலத்திருக்கழிப்பாலை, கனகரப்பட்டு, கிள்ளை, கீழச்சாவடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வயல்களில் சம்பா நடவு செய்த நெற்பயிர்கள் மற்றும் நடவுக்குத் தேவையான நாற்றங்கால், மழை மற்றும் கொள்ளிடம் ஆற்று நீர் கடலில் வடியாமல் எதிர்த்து வந்ததால் வீணாகிப் போனது எனக் கடந்த 4-ந்தேதி  நக்கீரன் இணையத்தில்  படத்துடன் செய்தி பிரசுரிக்கப்பட்டது. இந்தச் செய்தி விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

 

இந்நிலையில் செய்தி குறித்து விபரம் அறிந்த வேளாண்மை உதவி இயக்குநர் நந்தினி, வேளாண்மை அலுவலர் தீபதர்ஷினி, துணை வேளாண் அலுவலர் சிவசங்கர் மற்றும் வேளாண்துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட தெற்கு பிச்சாவரம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட நாற்றங்காலில் ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல் பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனர். 

 

பின்னர்  இது குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, மழையால் சேதம் அடைந்த நிலங்களை ஆய்வு செய்ய அரசு உத்தரவிடும்போது இதனைக் கணக்கில் எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார். இவர்களுடன்  கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்கத் தலைவர் கண்ணன் உள்ளிட்ட கிராமத்திலுள்ள விவசாயிகள் உடன் இருந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.