Skip to main content

டாஸ்மாக் விற்பனை கடும் சரிவு.. டாஸ்மாக் ஊழியர்களை வறுத்தெடுக்கும் அதிகாரிகள்...

Published on 04/06/2019 | Edited on 04/06/2019

கோவை வடக்கு மாவட்டத்தில் 150க்கு மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் கடந்த ஆண்டை காட்டிலும் விற்பனை கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. வருகிற மாதங்களில் அதனை ஈடுகட்டும் விதமாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு, அதிகாரிகளால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வருவாய் ஈட்ட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது..

 

official eyes on tasmac sales fall

 

இதன் ஒரு பகுதியாக, திங்களன்று கோவை வடக்கு மாவட்டத்தில் உள்ள 150 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளின் சூப்பர்வைசர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் பங்கேற்று விற்பனை சரிவுக்கான காரணத்தை கேட்டறிந்துள்ளார். அந்தக் கூட்டத்தில் பேசிய சூப்பர்வைசர்கள், கோடை காலம் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்களின் கவனம் முழுவதும் தங்களின் பிள்ளைகளின் கல்விச் செலவை ஈட்டுவதில் அக்கறை காட்டி வருகின்றனர். ஆகவே இந்த விற்பனை சரிவு என்பது நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் போலி மது வகைகள் அதிகம் புழக்கத்தில் இருக்கிறதா என்பதை கண்டறிந்து தகவல் அளிக்க வேண்டும் எனவும் அதே நேரத்தில் வருகிற நாட்களில் இழப்பை சரிகட்ட மதுவகை விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்தி வருவாய் ஈட்ட வேண்டும் எனவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இன்று கோவை வடக்கு மாவட்டத்தில் மதுபான விற்பனை சரிந்த 90 டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளர் கூட்டம் நடைபெற்று வருகிறது இதில் விற்பனையாளர்கள் கூடுதல் கவனமும் அக்கறையும் எடுத்து வருவாய் அதிகரிக்க தீவிரமாக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்படடதாக தெரிகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.