Skip to main content

கல்லணை சுழலில் சிக்கிய இளைஞன்;மீட்க வராத அதிகாரிகள்;பொறுமையிழந்த உறவினர்கள் சாலை மறியல்

Published on 05/09/2018 | Edited on 05/09/2018

புதுக்கோட்டை மாவட்டம் கீழாத்தூர் கோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன்(22) தனது நண்பர்களுடன் 20 கி.மீ தூரத்தில் ஓடும் தஞ்சை மாவட்டம் ஈச்சன்விடுதி 40 கண் பாலத்தில் குளிக்கச் சென்றுள்ளார். செவ்வாய் கிழமை மதியம் ஆற்றில் குதித்தவர்களின் மணிகண்டன் சுழலில் சிக்கிக் கொண்டுள்ளார்.  மணிகண்டன் சுழலில் சிக்கிக்கொண்டார் என்ற தகவலை  மீட்புக்குழுவினருக்கு கொடுத்தனர்.

 

kallanai

 

 

 

உறவினர்கள் வந்து தேடினார்கள். மீட்புக்குழுவினரும் மாலையில் வந்து தேடினார்கள் கிடைக்கவில்லை விடிந்து பார்க்கலாம் என்று சென்றவர்கள். புதன் கிழமை காலை 10 மணி வரை எந்த அதிகாரியும் வரவில்லை. இரவெல்லாம் ஆற்றுக்கரையில் காத்திருந்த உறவினர்கள் மீட்புக்குழுவினர் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தும் பயனில்லை. எந்த அதிகாரியும் வரவில்லை. 

அதனால் ஆற்றங்கரையில் திரண்ட உறவினர்கள் பட்டுக்கோட்டை – காரைக்குடி சாலையில் ஆவணம் கிராமத்தில் திடீர் சாலைமறியலில் அமர்ந்தனர். இதனால் இருபக்கத்திலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுமார் 4 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தபட்டது. 

 

kallanai

 

 

 

 

kallanai

 

 

 

நீண்ட நேரத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம் போலிசார் அங்கு வந்து சமாதானம் செய்தனர். ஆனால் சடலம் மீட்கப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மீட்புக்குழுவினர் வரும் வரை மறியலை கைவிடமாட்டோம் என்று உறுதியாக அமர்ந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு பேராவூரணி தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அதன் பிறகு மறியல் கைவிடப்பட்டது. தீயணைப்பு வாகனம் சம்மந்தப்பட்ட இடத்திற்கு செல்லும் முன்பே ஈச்சன்விடுதி முக்கனிப்பாலம் அருகே செருவாவிடுதி செல்லும் வாய்க்காலில் சடலம் ஒன்று உருண்டு போவதைக் கண்ட பொதுமக்கள் மீட்டனர். அது நேற்று சுழலில் சிக்கிய மணிகண்டன் உடலாக இருந்தது. அதிகாரிகள் துணை கிடைக்காமல் தவித்த உறவினர்கள் தாங்களே சடலத்தை மீட்டனர். 

 

kallanai

 

 

 

அதிகாரிகள் அபாயமான இடங்களை கண்டறிந்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர் மணிகண்டனின் உறவினர்கள். 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.