Skip to main content

கல்லணை சுழலில் சிக்கிய இளைஞன்;மீட்க வராத அதிகாரிகள்;பொறுமையிழந்த உறவினர்கள் சாலை மறியல்

Published on 05/09/2018 | Edited on 05/09/2018

புதுக்கோட்டை மாவட்டம் கீழாத்தூர் கோயில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் மணிகண்டன்(22) தனது நண்பர்களுடன் 20 கி.மீ தூரத்தில் ஓடும் தஞ்சை மாவட்டம் ஈச்சன்விடுதி 40 கண் பாலத்தில் குளிக்கச் சென்றுள்ளார். செவ்வாய் கிழமை மதியம் ஆற்றில் குதித்தவர்களின் மணிகண்டன் சுழலில் சிக்கிக் கொண்டுள்ளார்.  மணிகண்டன் சுழலில் சிக்கிக்கொண்டார் என்ற தகவலை  மீட்புக்குழுவினருக்கு கொடுத்தனர்.

 

kallanai

 

 

 

உறவினர்கள் வந்து தேடினார்கள். மீட்புக்குழுவினரும் மாலையில் வந்து தேடினார்கள் கிடைக்கவில்லை விடிந்து பார்க்கலாம் என்று சென்றவர்கள். புதன் கிழமை காலை 10 மணி வரை எந்த அதிகாரியும் வரவில்லை. இரவெல்லாம் ஆற்றுக்கரையில் காத்திருந்த உறவினர்கள் மீட்புக்குழுவினர் வருவார்கள் என்று எதிர்பார்த்திருந்தும் பயனில்லை. எந்த அதிகாரியும் வரவில்லை. 

அதனால் ஆற்றங்கரையில் திரண்ட உறவினர்கள் பட்டுக்கோட்டை – காரைக்குடி சாலையில் ஆவணம் கிராமத்தில் திடீர் சாலைமறியலில் அமர்ந்தனர். இதனால் இருபக்கத்திலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சுமார் 4 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நிறுத்தபட்டது. 

 

kallanai

 

 

 

 

kallanai

 

 

 

நீண்ட நேரத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம் போலிசார் அங்கு வந்து சமாதானம் செய்தனர். ஆனால் சடலம் மீட்கப்பட வேண்டும். சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மீட்புக்குழுவினர் வரும் வரை மறியலை கைவிடமாட்டோம் என்று உறுதியாக அமர்ந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு பேராவூரணி தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அதன் பிறகு மறியல் கைவிடப்பட்டது. தீயணைப்பு வாகனம் சம்மந்தப்பட்ட இடத்திற்கு செல்லும் முன்பே ஈச்சன்விடுதி முக்கனிப்பாலம் அருகே செருவாவிடுதி செல்லும் வாய்க்காலில் சடலம் ஒன்று உருண்டு போவதைக் கண்ட பொதுமக்கள் மீட்டனர். அது நேற்று சுழலில் சிக்கிய மணிகண்டன் உடலாக இருந்தது. அதிகாரிகள் துணை கிடைக்காமல் தவித்த உறவினர்கள் தாங்களே சடலத்தை மீட்டனர். 

 

kallanai

 

 

 

அதிகாரிகள் அபாயமான இடங்களை கண்டறிந்து எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர் மணிகண்டனின் உறவினர்கள். 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.