Skip to main content

கூட்டுறவுச் சங்கத்தில் அடகு வைத்த நகைகளை விற்பனை செய்த அலுவலர்கள்..!

Published on 04/09/2021 | Edited on 04/09/2021

 

Officers who sold pawned jewelery in the co-operative society ..!
                                                     மாதிரி படம்  

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் கூட்டுறவுத்துறையின் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டுவருகிறது. இதன் மூலம் இப்பகுதி விவசாயிகள் விவசாய கடன்களைப் பெற்றுவருகிறார்கள். அதேபோல் விவசாயிகளும், அப்பகுதி கிராம மக்களும் தங்களின் அவசர தேவைக்காக தங்களுக்கு சொந்தமான தங்க நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்றுவருகின்றனர். 

 

அப்படி அடகு வைத்த நகைகளை மீட்பதற்காக சங்க அலுவலகத்தில் உள்ள அலுவலர்களை சந்தித்து, பொதுமக்களும், விவசாயிகளும் கேட்டபோது முறையான பதில் அளிக்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கையில் பணத்துடன் சென்று தாங்கள் அடகு வைத்த நகையை மீட்க வேண்டும் என்று விடாப்பிடியாக கேட்டபோது சங்கத்தின் அலுவலர்கள், அடகு வைத்த நகையை ஏலம் விட்டு அதை விற்பனை செய்துவிட்டதாக கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நகையை அடமானம் வைத்த விவசாயிகளும் பொதுமக்களும் ஒன்று திரண்டு, ‘எங்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பாமல், தகவல் தெரிவிக்காமல் எப்படி நகையை ஏலம் விட்டு விற்பனை செய்வீர்கள்’ என்று கேட்டு அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

தகவலறிந்த வேளாண்மைக் கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நகை அடமானம் வைத்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். விரைவில் விசாரணை செய்து நகைகளைப் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தனர். அதில் சமாதானம் அடைந்த விவசாயிகளும், பொதுமக்களும் சாலை மறியலைக் கைவிட்டனர். இதற்கிடையே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்க அலுவலர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். 

 

கடந்த பத்தாண்டுகளாக சுமார் 200 முதல் 500 பவுன் நகைகள் அந்தத் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நகைகளை சங்க ஊழியர்கள், முறையான அறிவிப்பின்றி ஏலம்விட்டு விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து தீவிர ஆய்வு நடத்திவருவதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.