Advertisment

தலைமைச் செயலகத்தில் வாத்தி ரெய்டு - முதல்வரின் திடீர் வருகையால் அதிர்ந்த அதிகாரிகள்!

lhj

முதல்வரின் தனிப்பிரிவு செயல்படும் பகுதிக்குச் சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், அங்கு மனு கொடுக்க காத்திருந்தவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

Advertisment

தமிழ்நாடு முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் நலன் சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவருகிறார். குறிப்பாக, களத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வதை தற்போது வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், தலைமைச் செயலகத்தில் செயல்படும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு இன்று (05.10.2021) காலை சென்ற அவர், அங்கு மேற்கொள்ளப்படும் பணி தொடர்பாக ஆய்வு செய்தார். மனு கொடுக்க வந்த பொதுமக்களிடமும் அவர் கலந்துரையாடினார். பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். முதல்வரின் திடீர் வருகையை எதிர்பார்க்காத அதிகாரிகள், முதல்வரை நேரில் கண்டதும் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe