Skip to main content

பாரதியார் இல்லத்தில் அரசியல் செய்யும் அதிகாரிகள்

Published on 04/05/2019 | Edited on 04/05/2019

 மகாகவி பாரதியார் தன் கடைசி நாட்களில் திருவல்லிக்கேணி துளசிங்கப் பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். கோயில் யானையால் தாக்கப்பட்டு சிகிச்சை எடுத்த வந்த அவர், இந்த வீட்டில்தான் 1921 செப்டம்பர் 11ந் தேதி மரணத்தைத் தழுவினார். பாரதி வாழ்ந்த அந்த இல்லம், தமிழக அரசால் அவரது நினைவில்லமாக 93-ல் மாற்றப்பட்டு, பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் பராமரிக்கப்பட்டும் வருகிறது. 

 

barathi

 

இந்த இல்லத்தில் இருக்கும் அரங்கம், இலக்கியம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த வாடகைக்கும் விடப்படுகிறது. இதன்படி இங்கு எத்தனையோ கலை இலக்கிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இந்தநிலையில் ’சென்னை முத்தமிழ்ச்சங்கத்தினர்’ தங்கள் அமுதசுரபி அறக்கட்டளை சார்பில்,100 கவிஞர்கள் பங்கேற்கும் ஒரு மெகா கவியரங்க நிகழ்வை அங்கே நடத்த முடிவெடுத்தனர். இதற்கான இசைவை, அறக்கட்டளை நிர்வாகி பாவலர் ஞானி, பாரதியார் நினைவில்லக் காப்பாளர் கிருஷ்ண மூர்த்தியிடம்  பெற்றார். இதற்கான முன்பணத்தையும் கொடுத்து, ஏப்ரல் 21-ந் தேதி விழாவை நடத்த இடத்தைப் பதிவுசெய்தார். 

 

இந்தநிலையில் இல்லக் காப்பாளர் அமுதசுரபி அறக்கட்டளை நிர்வாகிகளிடம், நீங்கள் நடத்தும் விழாவில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்று விசாரித்திருக்கிறார். அதற்கு நிர்வாகிகள், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் எங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்றனர். 

 

இதைக்கேட்ட இல்லக் காப்பாளர்‘வைரமுத்து தி.மு.க. ஆதரவாளர் ஆச்சே... அதனால் நீங்கள் இங்கே விழாவை நடத்த அனுமதிக்க முடியாது” என்று கறாராக மறுத்துவிட்டார்.  அதோடு விழா விதிமுறைகளை பின்பற்றமுடியாததால், இங்கே  நாங்கள் விழாவை நடத்த விரும்பவில்லை என்று பாவலர் ஞானியிடம் வற்புறுத்தி எழுதி வாங்கிக்கொண்டு, வாங்கிய முன் பணத்தையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். விழா நடக்க  இரண்டே நாட்கள் இருந்த நிலையில், இப்படி திடீரென விழாவிற்கு அடாவடியாக இடம்தர மறுத்திருக்கிறார் இல்லக் காப்பாளர்கிருஷ்ணமூர்த்தி  இதனால் திகைத்துப்போன நிகழ்ச்சி அமைப்பாளர்கள், அரக்கபரக்க ஓடி, அருகில் இருந்த ராமானுஜர் திருமண மண்டபத்தைப் பிடித்து, அந்த மெஹா கவியரங்க நிகழ்வை சிறப்பாகவே நடத்தி முடித்திருக்கிறார்கள்.

 


வைரமுத்து பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு பாரதி இல்லப் பொறுப்பாளர் இடம் தர மறுத்திருப்பது, இலக்கிய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.  
 


.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமார் 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Sarathkumar merged the party into the BJP

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

திமுக, கூட்டணி, தொகுதிப்பங்கீட்டை முடித்து வேட்பாளர் தேர்வை தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, பாமக திடீரென பாஜகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாஜக கூட்டணியில் உள்ள தமாகா, தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டி.டி.வி.தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணி வைக்கவும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. அதேநேரம் சமத்துவ மக்கள் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அண்மையில் நடிகர் சரத்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

பாஜக-சமத்துவ மக்கள் கட்சி இடையே விரைவில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய அறிவிப்பாக தனது கட்சியான சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார் சரத்குமார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. காமராஜர் போல மோடி ஆட்சி செய்வதாக தெரிவித்துள்ள சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது கட்சியின் முடிவல்ல என்றும் இது மக்கள் பணிக்கான தொடக்கம் என விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

'அன்று அமலாக்கத்துறை; இன்று என்சிபி; பாஜக அரசியல் எடுபடாது'- அமைச்சர் ரகுபதி பேட்டி 

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
'BJP has abandoned the anti-narcotics unit' - Minister Raghupathi interview

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு நேற்று கைது செய்தது. இந்த கைதை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரி, ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை திரைப்படங்களை எடுப்பதில் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அமைச்சர் ரகுபதி பேசுகையில், ''ஏற்கனவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை இறக்கி விட்ட பாஜக தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவை ஏவி விட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவியேற்றது முதல் தற்பொழுது வரை போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதைப் பொருள் வழக்கு விசாரணை முடிவடையும் முன்பே டெல்லியில் என்சிபி அதிகாரி ஒருவர் பேட்டியளிக்கிறார்.

என்சிபி அதிகாரியின் பேட்டியை வைத்து அரசியல் செய்யலாம் என பாஜக நினைக்கிறது. ஒன்றிய அரசின் புலன் விசாரணை அமைப்புகள் பாஜகவை எப்படியாவது தாங்கி பிடிக்கலாம் என நினைக்கின்றன. ஜாபர் சாதிக் தேடப்படும் குற்றவாளியாக பிப்ரவரி 16ஆம் தேதி அறிவித்த என்சிபி, 21ஆம் தேதி திரைப்பட விழாவில் பங்கேற்றபோது கைது செய்யாதது ஏன் என்று தெரியவில்லை. ஜாபர் சாதிக் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்காமல் திமுகவிற்கு களங்கம் கற்பிக்க முயற்சி நடைபெறுகிறது.

ஜாபர் சாதிக் மீது 2013ஆம் ஆண்டே  அதிமுக ஆட்சியில் போதைப்பொருள் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அப்பொழுது பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜ் ஜாபர் சாதிக்கிற்காக ஆஜராகி உள்ளார். ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தியதாகக் கூறப்படும் இடம் டெல்லி தானே தவிர தமிழ்நாடு அல்ல. திமுக அரசுக்கு எதிராக பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்கவே போதைப்பொருள் மாநிலம் போல் சித்தரிக்க பாஜக முயற்சிக்கிறது.

நாட்டிலேயே அதிகமாக போதைப்பொருள் கடத்துவது பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் தான். ஜாபர் சாதிக்கிற்கும் திமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. போதைப்பொருள் தொடர்பாக புகார் எழுந்த உடனேயே ஜாபர் சாதிக்கை உடனடியாக திமுகவிலிருந்து நீக்கி விட்டோம். பாஜக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது''என்றார்.