Skip to main content

ஓபிஎஸ் -ன் துஷ்பிரயோகம்! திமுக வழக்கின் முழு விபரம்!

Published on 16/07/2018 | Edited on 16/07/2018
pannerselvam

 

பொது ஊழியர் என்ற அமைச்சர் பதவியை துஷ்பிரயோகப்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் குவித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்மீது சட்டபூர்வ குற்ற நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனருக்கு உத்திரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

 

இவழக்கு மனுவில் ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பதாவது:
ஊழல்தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து  ஜெயலலிதா தனது முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதால், அதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம்   29.09.2001 முதல் ௦1.03.2002 வரை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார் அதன் பின்பு பொதுப்பணித்துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார். சொத்து குவிப்பு வழக்கில்  ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து 28.09.2014 முதல் 22.05.2015 மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார். 2016 ஆம் ஆண்டு போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு நிதியமைச்சராக பதவி வகித்த நிலையில், செல்வி. ஜெயலலிதாவின் இறப்பை தொடர்ந்து 06.12.2016 முதல் தான் ராஜினாமா செய்த நாளான 05.02.2017 வரை மீண்டும் தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்தார். 21.08.2017ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக பதவி ஏற்று தற்பொழுது துணை முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.  

 

இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் “பொது ஊழியர்” (PUBLIC SERVANT) என்ற விளக்கத்திற்குள் வருகின்ற துணை முதலமைச்சர் பதவியை வகித்து வருகிறார்.

 

     ஓ.பன்னீர்செல்வம் மாநில அமைச்சர் என்ற அதிகாரத்தை துஷ்பிரயோகப் படுத்தி சட்ட விரோதமாக சொத்துக்களை குவித்து தனது மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், சுப்புராஜ் என்கிற தனது நண்பர் உள்ளிட்ட பல்வேறு நபர்களின் பேரில் அதிக அளவிலான சொத்துக்களை வாங்கியும் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்தும் உள்ளார்.

 

     சட்டமன்ற உறுப்பினராக தனக்கு கிடைக்கும் சம்பளத்தை விட குறைவான தொகையை தனது வருமானமாக வேட்புமனுவுடன் தாக்கல் செய்த உறுதிமொழி ஆவணத்தில் கூறியுள்ளார். குறைவான வருமானத்தை காட்டிய அதே நேரத்தில் அதைவிட மூன்று மடங்கு அதிகமுள்ள விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தெரிவித்து உள்ளார்.

 

     தனது குடும்ப பாகப்பிரிவினையின் மூலம் கிடைத்த சொத்துக்கள் குறித்து வேட்புமனுவுடன் தாக்கல் செய்த உறுதிமொழி ஆவணத்தில் குறிப்பிடவில்லை. தனது மனைவியின் பெயரில் வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்து விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. 2016 - ஆம் ஆண்டு பொது தேர்தலில் தான் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்பு மனுவுடனான  உறுதிமொழி ஆவணத்தில் தனது பெயரில் உள்ள சொத்துக்களை அவர் முழுமையாக குறிப்பிடவில்லை.

 

     தனது மகன்களான ரவீந்திரநாத் குமார், ஜெயப்ரதீப் மற்றும் மகள் கவிதாபானு ஆகியோர் இந்தியாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, துருக்கி, இந்தோனேஷியா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களில் ரூபாய் 200 கோடிக்கும் மேல் முதலீடு செய்துள்ளனர். 25 வயது கூட நிரம்பாத அவரது மகன் 3 நிறுவனங்களில் இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.

 

     அவரது மகன்கள் இயக்குனர்களாக உள்ள நிறுவனங்களில் மற்ற இயக்குனர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தை விட மூன்று மடங்கு சம்பளம் இவர்களுக்கு வழங்கப்பட்டுளது. இவரது குடும்ப உறுப்பினர்கள் இயக்குனர்களாக உள்ள பல்வேறு நிறுவனங்கள் சட்டத்திற்கு உட்பட்டு செயல்படவில்லை, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு சொத்துக்களை சட்ட விரோதமாக சேர்க்கும் விதத்திலேயே செயல்பட்டு வருகின்றன.

 

     எஸ்.ஆர்.எஸ். நிறுவனம் என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி வரும் சேகர் ரெட்டி மூலம் சட்ட விரோதமாக பலன் அடைந்த நபர்களின் பட்டியலில் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து நவம்பர் மாதத்திற்குள் சுமார் நான்கு கோடிரூபாய் சட்ட விரோதமாக பெற்றுள்ளது அவர்களது டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனது மகன்கள் இயக்குனர்களாக உள்ள நிறுவனங்களுக்கு கூடுதல் மதிப்பீட்டு வரியில் சலுகை அளிக்கும் விதமாக முதலமைச்சராக இருந்த 2015 ஆம் ஆண்டு ஓர் அரசாணை வெளியிடப்பட்டு அதன் மூலம் அந்த நிறுவனம் சட்ட விரோதமாக பலன் அடைந்து உள்ளது.

 

     இது சம்பந்தமாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரிடம் கடந்த மார்ச் மாதம் அனைத்து விபரங்களும் அடங்கிய புகார் கொடுக்கப்பட்டு, அமைச்சர் பதவியை துஷ்பிரயோகப்படுத்தி, சட்டவிரோதமான முறையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்த  ஓ.பன்னீர்செல்வம் மீதும் அவரது பினாமிகள் மீதும் ஊழல் தடுப்புச் சட்டம், வருமான வரிச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் படி குற்ற நடவடிக்கை எடுக்க கோரியிருந்தோம் ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனருக்கு உத்திரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது .

 

`     இதே போன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது பதவியை துஷ்பிரயோகப்படுத்தி தனது உறவினர்கள் நடத்தி வரும் நிறுவனங்களுக்கு சுமார் 1000 கோடி ரூபாய்க்கு  மேல்   மதிப்புள்ள  நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களை  சட்ட விரோதமாக வழங்கியது குறித்தும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குனருக்கு புகாரளித்தும் அதன் மீதும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.