Skip to main content

வாங்க... வாங்க... ஒரு ஓட்டு போட்டுட்டு போங்க... ஈரோட்டில் பரபரப்பாகிய மக்கள்...

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

என்று இன்று ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலை பள்ளி முன்பு நின்று அரசு ஊழியர்கள் சாலையில் சென்ற மக்களை அழைக்க, எதுக்கப்பா? என்னப்பா தேர்தல்? ஈரோடு எம்.எல்.ஏ. நல்லாத்தானே இருக்காரு, இப்படியொரு தேர்தல்னு தேர்தல் கமிஷன் அறிவிக்க வே இல்லையே என்ற பல கேள்விகள் குழப்பத்துடன் மக்களில் சிலர் பள்ளிக்குள் சென்றனர் அதன் பிறகு தான் தெரிந்தது.
 

vote

 

 

தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான மாதிரி ஒட்டுப்பதிவு என்பது.  உள்ளாட்சி தேர்தலுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை  செய்து வருகிறது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் இதன் மூலம் தொடங்கியிருக்கிறது.

சென்ற  5-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஈரோடு கலெக்டர் கதிரவன் வெளியிட்டார்.  இதனைத் தொடர்ந்து வந்த வாக்காளர்பட்டியல் ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டது.

ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 8798 எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  இதில் 5887 வாக்குப்பதிவு எந்திரங்களும் 2921 கண்ட்ரோல் யூனிட் எந்திரங்களும் அடங்கும்.  

இந்த எந்திரங்கள் ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜ் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஸ்டாக்  வைக்கப்பட்டுள்ளது.  சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் நடந்த தேர்தலில்  பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள் தான் அவை. அங்கிருந்து இங்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.  இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள்  முறையாக செயல்படுகிறதா?   என்பதை பரிசோதிக்கும் வகையில் இன்று கருங்கல்பாளையம் காமராஜ் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது.  இதில் ஈரோடு மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி யில் பணியாற்றும்  ஊழியர்கள் பங்கேற்றனர். ஊழியர்கள், பொதுமக்கள்  மாதிரி ஓட்டுகளை பதிவு செய்தனர்.  ஒரு எந்திரத்தில் ஆயிரம் ஓட்டுகள் பதிவாகி உள்ளதா என்று சோதனை செய்தனர்.  பல இயந்திரங்கள் பழுதாக  பெல் கம்பெனியில் இருந்து வந்த  இன்ஜினியர்கள் எந்திரத்தில் ஏற்பட்டிருந்த பழுதை சரி செய்தனர்.  இவை அரசியல் கட்சியின்  பிரமுகர்கள் முன்னிலையில்  நடந்தது. ஆனால் சின்னம் மட்டும் கட்சி சின்னம் இல்லை. இதனால் ஒட்டுப்போட்டவர்கள் ஏமாற்றத்துடன் காணப்பட்டனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.